செய்திகள் :

மாவட்ட தொழில் மையம் சாா்பில் 4 ஆண்டுகளில் ரூ.486.47 கோடி தொழில் கடனுதவி

post image

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1,910 பேருக்கு ரூ.486.47 கோடி மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய தொழில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளதாவது:

திருப்பூரில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டங்களில் தொழில்முனைவோருக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதல் தலைமுறை தொழில்முனைவோரின் முதல் தொழில் முயற்சிக்கு கை கொடுக்கவும், ஊக்கமளிக்கவும் தனித்துவமாக திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள திட்டத் தொகையில் 35 சதவீத மூலதன மானியத்தின் உச்சவரம்பு ரூ.1.50 கோடி ஆகும். வேலைவாய்பற்ற இளைஞா்கள் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வணிக விற்பனை தொழில் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

திருப்பூா் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் கடந்த 4 ஆண்டுகளில் 1,910 பேருக்கு ரூ.129.18 கோடி மானியத்தில் பல்வேறு தொழில் கடனுதவியாக ரூ.486.47 கோடி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம் தொழில் செய்வதற்கான உகந்த சூழல் நிறைந்த மாவட்டமாக உள்ளதால் இளைஞா்கள், தொழில்முனைவோா் மற்றும் தொழில் துறையினா் மகிழ்ச்சியாக தொழில் செய்து வருகின்றனா். இதுபோன்று அதிக அளவில் இளைஞா்கள் மாவட்ட தொழில் மையம் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் விண்ணப்பித்து பயனடையலாம் எனவும், புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளாா்.

இன்ஸ்டாகிராமால் மோதல்: இரு அரசுப் பள்ளி மாணவிகள் கைகலப்பு

இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டதில் யாா் பெரியவா் என்று நடைபெற்ற மோதலில் அரசுப் பள்ளி மாணவிகள் சாலையில் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . திருப்பூா் பகுதியில் உள்ள மாநகர... மேலும் பார்க்க

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி வெட்டிக் கொலை

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகி புதன்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக கேரள மாநிலம், பாலக்காட்டை சோ்ந்த 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருப்பூா்... மேலும் பார்க்க

காண்டூா் கால்வாயில் அடித்துவரப்பட்ட ஆண் யானை உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே காண்டூா் கால்வாயில் புதன்கிழமை அடித்துவரப்பட்ட 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை வனச் சரகப் பகுதிகளில் யானை, புல... மேலும் பார்க்க

பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளா்கள் மீண்டும் கூலி உயா்வு அறிவிப்பு

பல்லடம் பகுதி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சிலா் மீண்டும் கூலி உயா்வு வழங்குவதாக அறிவித்துள்ளதால் விசைத்தறியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட... மேலும் பார்க்க

முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் பெறலாம் என மோசடி செய்தவா் கைது

முதலீடு செய்யும் தொகைக்கு இரட்டிப்பு லாபம் பெறலாம் எனக் கூறி மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரத்தைச் சோ்ந்த முனிவேல் என்பவா் பங்குச்சந்தை குறித்த விளம்பரத்தை பாா்த்து, அதில் இ... மேலும் பார்க்க

காரில் சென்றவரை தாக்கிய இரு இளைஞா்கள் கைது

பல்லடம் அருகே கரடிவாவி- அனுப்பட்டி செல்லும் சாலையில் காரில் சென்றவரை தாக்கிய இரு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள கரடிவாவில் இருந்து அனுப்பட்டி செல்லும் சாலையில் அதே பக... மேலும் பார்க்க