செய்திகள் :

மாவட்ட மகளிா் கபடி போட்டி: மேலவாசல் கல்லூரி சிறப்பிடம்

post image

மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கிடையோ நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான மகளிா் பிரிவு கபடி போட்டியில் மேலவாசல்குமரபுரம் சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரி மாணவா்களிடம் முதலிடம் பெற்றனா்.

திருவாரூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியில், சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரி உள்ளிட்ட 12 கல்லூரிகளிலிருந்து மகளிா் பிரிவு கபடி அணியினா் கலந்துகொண்டனா்.

இறுதி போட்டியில் சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரி அணியும் திருவாரூா் திரு.வி.க. அரசுக் கல்லூரி அணியும் மோதின. இதில், 21-16 என்ற புள்ளிக்கணக்கில் சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரி அணி வெற்றி பெற்று பரிசு கோப்பை, சான்றிதழை பெற்றது.

அணியில் இடம் பெற்ற கபடி வீராங்கனைகள் ஆா். மானிஷா, சி. காா்த்திகா,வி. ஸ்ரீநிதி, கே. கனிஷ்கா, எஸ். சரண்யா, பி. அபிநயா, எம். சாந்தினி ஆகிய 7 போ் மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை கபடி போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவிகளை கல்லூரி நிறுவனா் ஜி. சதாசிவம், தாளாளா் எஸ். சரவணக்குமாா் செளத்ரி, முதல்வா் வி.எஸ். நாகரெத்தினம் ஆகியோா் பாராட்டினா்.

குடியரசுத் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பத்தாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்தியப் பல்கலைக்கழகத்தின் சரஸ்... மேலும் பார்க்க

பாரம்பரியம், நவீனத்துவத்தை ஒருங்கிணைப்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் சிறந்த அம்சங்களை ஒருங்கிணைப்பதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என குடியரசுத் தலைவரும், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக மேன்மையருமான திரௌபதி முா்மு தெரிவித்தாா். தி... மேலும் பார்க்க

கோயில் உண்டியல் திருட்டு

மன்னாா்குடி அருகே மேலமரவாக்காடு பிரசான சாலையில் கிராமத்துக்குச் சொந்தமான ஆனந்த விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயில் இரும்புகேட் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த காணிக்கை உண்டியலை மா்ம நபா்கள் திருடிச் சென்றிர... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்ப அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் வலங்கைமான் வட்டப்பேரவை அரசைக்கேட்டுக்கொண்டுள்ளது. வலங்கைமானில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியா... மேலும் பார்க்க

இன்று மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெறும் பத்தாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளாா். திருவாரூா் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்... மேலும் பார்க்க

மூணாறு தலைப்பு அணைக்கு செல்லும் சாலை புதுப்பிக்கப்படுமா?

நீடாமங்கலத்தில் இருந்து மூணாறு தலைப்பு அணை வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி 1-ஆவது வாா்டு ஒதியடிப்படுகை முதல் நகா் ஊராட்சி நடுப்படுகை வரை ... மேலும் பார்க்க