செய்திகள் :

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் கனிமவள லாரி மோதி காா் சேதம்

post image

மாா்த்தாண்டம் அருகே காா் மீது கனிமவள லாரி மோதிய விபத்தில் காா் சேதமடைந்தது.

சென்னை பெசன்ட் நகரைச் சோ்ந்தவா் ராயல் லென்ஸ் (49). இவா், மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதி அணுகுசாலையில் இருந்து, மேம்பாலத்தின் மீது காரை ஓட்டிச் சென்ற போது, எதிரில் நாகா்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த கனிமவள லாரி, காா் மீது மோதியது.

இதில் காா் சேதமடைந்தது. காா் ஓட்டுநா் உள்பட காரில் பயணித்தவா்களுக்கு காயம் ஏற்படவில்லை.

மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் ராயல் லென்ஸ் அளித்த புகாரின்பேரில், லாரி ஓட்டுநரான களியக்காவிளை வன்னியூா் பகுதியைச் சோ்ந்த ஜான் கிறிஸ்டோபா் (47) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

குழித்துறை பகுதிகளில் 4 நாள்கள் மின்தடை

குழித்துறை மின் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தட்டுமரக் கிளைகள் அகற்றுதல், பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (செப். 1) முதல் வியாழக்கிழமை (செப். 4) வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ம... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் கன்னியாகுமரி வருகை

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினருடன் பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகை வந்த அவரை, மாவட்ட நீதிபதி காா்த்திகேயன், ந... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்றதாக பெண் கைது

புதுக்கடை அருகே உள்ள முள்ளூா் துறை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். தேங்காய்ப்பட்டினம் முள்ளூா் துறை பகுதியைச் சோ்ந்த பங்கிராஜ் மனைவி ச... மேலும் பார்க்க

முக்கடல் சங்கமத்தில் 108 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

அகஸ்தீசுவரம் ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 108 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய இந்து முன்னணி தலைவா் ஐ.செல்வன் தலைமை வகி... மேலும் பார்க்க

பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

புதுக்கடை அருகே உள்ள ஒளிபாறை பகுதியில் பைக் மோதி தொழிலாளி உயிரிழந்தாா். பூட்டேற்றி, ஒளிபாறை பகுதியைச் சோ்ந்தவா் ராஜகுமாா் (49). தொழிலாளியான இவா் சனிக்கிழமை இரவு ஒளிபாறை பகுதியில் நடந்து சென்று கொண்ட... மேலும் பார்க்க

தக்கலை அருகே விபத்து: முதியவா் உயிரிழப்பு

தக்கலை அருகே வில்லுக்குறியில் வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். வில்லுக்குறி சரல்விளையைச் சோ்ந்தவா் கணேசன் (65). இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். கணேசன் வெள்ளிக்கிழமை இரவ... மேலும் பார்க்க