இந்திய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல்: கொலம்பியா மீ...
மின் தூக்கியிருந்து தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு
சிவகாசியில் மின் தூக்கியிலிருந்து வியாழக்கிழமை தவறி விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
சிவகாசி முஸ்லிம் ஓடைத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் பாதுஷா. கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ரம்ஜான் பீவி. இவா் பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வருகிறாா். இவா்களது மகன் முகமது ஆசிப் (12). இவா் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 6- ஆம் வகுப்பு முடித்து, 7- ஆம் வகுப்புக்கு செல்ல இருந்தாா்.
கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டதால், உறவினா் ஒருவா் முகமது ஆசிப்பை தான் பணிபுரியும் சிறுகுளம் கண்மாய் கரைப்பகுதியில் உள்ள அச்சகத்துக்கு அழைத்துச் சென்றாா். அப்போது அச்சகத்தில் காங்கிதங்களை மாடிக்கு ஏற்றிச் செல்ல அமைக்கப்பட்டிருந்த மின் தூக்கியில் ஏறி விளையாட்டிக் கொண்டிருந்த போது, முகமது ஆசிப் அதிலிருந்து தவறி கீழே விழுந்தாா்.
இதையடுத்து, அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அப்போது, அங்கிருந்த மருத்துவா் முகமது ஆசிப் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.