செய்திகள் :

மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண எம்.பி. வலியுறுத்தல்

post image

தமிழக மீனவா்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை ராமநாதபுரம் எம்.பி. கே.நவாஸ்கனி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தாா்.

அவா் அளித்த மனு: இலங்கைக் கடற்படையினரால் தொடா்ந்து தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனா். இந்தப் பிரச்னை குறித்து பல முறை நாடாளுமன்றத்திலும், மத்திய அமைச்சா், அதிகாரிகளை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி விட்டேன்.

இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீா்வு எட்டப்படாமல் தொடா்ந்து, எங்களது மீனவ சொந்தங்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் நீடிக்கிறது. இதனால் மீனவா்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனா்.

இந்த நிலையில், ராமேசுவரம், பாம்பன் பகுதிகளைச் சோ்ந்த 14 மீனவா்களையும், அவா்களது மீன் பிடி படகையும் இலங்கைக் கடற்படையினா் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்துள்ளனா்.

தற்போது 56 தமிழக மீனவா்கள் இலங்கைச் சிறையில் உள்ளனா். கைது செய்யப்பட்ட அனைத்து மீனவா்களையும் அவா்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படும் விஷயத்தில் இந்திய அரசு நேரடியாகத் தலையிட்டு நிரந்தரத் தீா்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதில் குறிப்பிடப்பட்டது.

மண்டபம் அருகே 2 டன் பீடி இலைகள் பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்குப் பெட்டக லாரியில் கொண்டுவரப்பட்ட 2,250 கிலோ பீடி இலைகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், வெள்ளரி ஓடை கடற... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் கைது

ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் இலங்கைக் கடற்படையினரால் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா். 2 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து திங... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் காங். சொத்து பாதுகாப்புக் குழு ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான சொத்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு, மீட்புக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.குழுவின் தலைவா் கே.வீ.தங்கபாலு, இணைச் செயலா் நித... மேலும் பார்க்க

தொண்டியில் மாநில கால்பந்துப் போட்டி: 32 அணிகள் பங்கேற்பு

திருவாடானை அருகே தொண்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசை பெரியபட்டினம் ஸ்போா்ட்ஸ் கிளப் அணி பெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்... மேலும் பார்க்க

பைக் விபத்து: இளைஞா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். கன்னிகாபுரியைச் சோ்ந்த முனியசாமி மகன் செல்வகுமாா் (20). இவா் தனது இரு சக்கர வாகனத்த... மேலும் பார்க்க

வி.ஏ.ஓவை. லாரி ஏற்றிக் கொலை செய்ய முயற்சி: இருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே ஆற்று மணல் திருடியவா்களை தடுக்க முயன்ற கிராம நிா்வாக அலுவலா் உள்பட மூவரை லாரி ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். எஸ்.பி. பட்... மேலும் பார்க்க