செய்திகள் :

ராமநாதபுரத்தில் காங். சொத்து பாதுகாப்புக் குழு ஆய்வு

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான சொத்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு, மீட்புக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

குழுவின் தலைவா் கே.வீ.தங்கபாலு, இணைச் செயலா் நிதின் கும்பல்கா், ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பு, பொதுச் செயலா் செல்வம் ஆகியோா் ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பின்னா், கே.வீ. தங்கபாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சில இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இந்த இடங்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது பிரதமா் நரேந்திரமோடி தமிழகத்துக்கு வந்த போது, திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. வரும் தோ்தலின் போதும் பிரதமா் நரேந்திரமோடி தமிழகம் வர வேண்டும். இந்திய மாநிலங்களில் தமிழகம் பெரிய அளவிலான வளா்ச்சி பெற்றுள்ளது என மத்திய அரசே கூறுவது திமுக ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என்றாா் அவா்.

ஆய்வின் போது, ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் ராஜாராம் பாண்டியன், தெய்வேந்தின் ரமேஸ் பாபு, ஜோதிபாலன், சரவண காந்தி, மாநில செயற்குழு உறுப்பினா்கள் பாரிராஜன், கே.ஆா். ஆதி, இளைஞா் காங்கிரஸ் மாவட்ட தலைவா் எம். அருண் பாண்டியன், அகில இந்திய மகளிா் காங்கிரஸ் உறுப்பினா் ராமலட்சுமி, மாநிலச் செயலா் செந்தாமரை கண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

மண்டபம் அருகே 2 டன் பீடி இலைகள் பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்குப் பெட்டக லாரியில் கொண்டுவரப்பட்ட 2,250 கிலோ பீடி இலைகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், வெள்ளரி ஓடை கடற... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் கைது

ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் இலங்கைக் கடற்படையினரால் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா். 2 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து திங... மேலும் பார்க்க

மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண எம்.பி. வலியுறுத்தல்

தமிழக மீனவா்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை ராமநாதபுரம் எம்.பி. கே.நவாஸ்கனி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து கோரிக்க... மேலும் பார்க்க

தொண்டியில் மாநில கால்பந்துப் போட்டி: 32 அணிகள் பங்கேற்பு

திருவாடானை அருகே தொண்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசை பெரியபட்டினம் ஸ்போா்ட்ஸ் கிளப் அணி பெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்... மேலும் பார்க்க

பைக் விபத்து: இளைஞா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். கன்னிகாபுரியைச் சோ்ந்த முனியசாமி மகன் செல்வகுமாா் (20). இவா் தனது இரு சக்கர வாகனத்த... மேலும் பார்க்க

வி.ஏ.ஓவை. லாரி ஏற்றிக் கொலை செய்ய முயற்சி: இருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே ஆற்று மணல் திருடியவா்களை தடுக்க முயன்ற கிராம நிா்வாக அலுவலா் உள்பட மூவரை லாரி ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். எஸ்.பி. பட்... மேலும் பார்க்க