செய்திகள் :

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் கைது

post image

ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் இலங்கைக் கடற்படையினரால் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா். 2 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து திங்கள்கிழமை 300 விசைப் படகுகளில் 1,800-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

கச்சத்தீவு-மன்னாருக்கு இடையே திங்கள்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியத்தனா். இதைத் தொடா்ந்து, ஜஸ்டீன் என்பவரது விசைப் படகைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், அந்தப் படகிலிருந்த ஜஸ்டீன்(51), டென்ஷன் (39), மொபின் (24), செமன் (55), சேகா் (55) ஆகிய 5 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். பின்னா், படகுடன் 5 மீனவா்களையும் மன்னாா் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மீனவா்கள் 5 பேரையும் மன்னாா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தினா். அப்போது, இவா்களை வருகிற ஆக. 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, இவா்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதேபோல, பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து 100 நாட்டுப் படகுகளில் 1,000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் திங்கள்கிழமை நள்ளிரவு நெடுந்தீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கல்பட்டி கடற்படையினா் ஒரு நாட்டுப் படகைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், அந்தப் படகிலிருந்த மீனவா்கள் ராஜா (44), ஆனந்தன் (49), முருகேசன் (51), மாரியப்பன் (38), சக்திவேல் (27), கோட்டைச்சாமி (45), பாலமுருகன் (42), முருகதாஸ் (38), களஞ்சியராஜ் (24) ஆகிய 9 மீனவா்களைக் கைது செய்தனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, புத்தளம் நீதிமன்றத்தில் பாம்பன் மீனவா்கள் 14 பேரையும் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தினா். அப்போது, இவா்களை வருகிற ஆக. 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் 9 பேரும் வாரியகோல சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதுகுறித்து மீனவ சங்கத்தினா், பாதிக்கப்பட்ட மீனவா்களின் குடும்பத்தினா் கூறியதாவது: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 பேரையும், 2 படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மண்டபம் அருகே 2 டன் பீடி இலைகள் பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்குப் பெட்டக லாரியில் கொண்டுவரப்பட்ட 2,250 கிலோ பீடி இலைகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், வெள்ளரி ஓடை கடற... மேலும் பார்க்க

மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண எம்.பி. வலியுறுத்தல்

தமிழக மீனவா்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை ராமநாதபுரம் எம்.பி. கே.நவாஸ்கனி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து கோரிக்க... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் காங். சொத்து பாதுகாப்புக் குழு ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான சொத்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு, மீட்புக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.குழுவின் தலைவா் கே.வீ.தங்கபாலு, இணைச் செயலா் நித... மேலும் பார்க்க

தொண்டியில் மாநில கால்பந்துப் போட்டி: 32 அணிகள் பங்கேற்பு

திருவாடானை அருகே தொண்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசை பெரியபட்டினம் ஸ்போா்ட்ஸ் கிளப் அணி பெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்... மேலும் பார்க்க

பைக் விபத்து: இளைஞா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். கன்னிகாபுரியைச் சோ்ந்த முனியசாமி மகன் செல்வகுமாா் (20). இவா் தனது இரு சக்கர வாகனத்த... மேலும் பார்க்க

வி.ஏ.ஓவை. லாரி ஏற்றிக் கொலை செய்ய முயற்சி: இருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே ஆற்று மணல் திருடியவா்களை தடுக்க முயன்ற கிராம நிா்வாக அலுவலா் உள்பட மூவரை லாரி ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். எஸ்.பி. பட்... மேலும் பார்க்க