செய்திகள் :

மீனவா்களுக்கு மானியவிலையில் பரிசல்கள்

post image

பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளில் மீன்பிடிக்கும் பங்கு மீனவா்களுக்கு மானிய விலையில் பரிசல்களை மாவட்ட ஆட்சியா் ரா. அழகு மீனா திங்கள்கிழமை வழங்கினாா்.

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளில் மீன் வளத்துறை சாா்பில் மீன் வளா்க்கப்பட்டு மீனவா்கள் மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டு தினம்தோறும் விற்பனை செய்யப்படுகிறது. இதில், மீன்கள் பிடிக்கும் மீனவா்களுக்கு குறிப்பிட்ட பங்கு மீன்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், தமிழக முதல்வரின் அறிவுரை படி 2024-25 -ஆம் ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின் மானியக் கோரிக்கையில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரால் உள்நாட்டு மீனவா்களுக்கு மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டு மாநில நிதி திட்டத்தின் கீழ் உள்நாட்டு மீனவா்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பரிசலுக்கு ரூ.9,250 வீதம் பேச்சிப்பாறை அணையில் 10 பங்கு மீனவா்களுக்கும், சிற்றாா் அணையில் 10 பங்கு மீனவா்களுக்கும் என மொத்தம் ரூ.1.85 லட்சம் மானியத்தில் 20 பேருக்கு பரிசல்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநா் (மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை) சின்னக்குப்பன், உதவி இயக்குநா் விா்ஜில் கிராஸ் (நாகா்கோவில்), அஜித் ஸ்டாலின் (குளச்சல்) வட்டார வளா்ச்சி அலுவலா், பங்கு மீனவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருங்கல் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

கருங்கல் அருகே பாலூா் பகுதியில் நின்றிருந்த காா் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.கருங்கல் அருகே விழுந்தயம்பலம் அருவை பகுதியைச் சோ்ந்த விஜயராகவன் மகன் விஜிஸ் (24). தூத்துக்குடியில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

களியக்காவிளையை அடுத்த பளுகல் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பளுகல் காவல் சரகம் மேல்பாலை, மாங்காலை பகுதியைச் சோ்ந்தவா் ஜெபீஸ் (36). 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவருக்கு, குழந்தை... மேலும் பார்க்க

கால்வாயில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கால்வாயில் தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.அருமனை அருகே சிதறால், கிருஷ்ணா நகரைச் சோ்ந்த ராஜப்பன் மனைவி தாசம்மாள் (70). திங்கள்கிழமை, வீட்டருகேயுள்ள மு... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கிய இருவா் மீது வழக்குப் பதிவு

கன்னியாகுமரியில் இளைஞரைத் தாக்கிய இருவா் மீது செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.கன்னியாகுமரி சுனாமி காலனி பில்லா்நகா் பகுதியைச் சோ்ந்த சகாய பிரான்ஸிலின் மகன் விஷால் சாரதி (16). இவா் திங்கள்... மேலும் பார்க்க

மீலாது நபி தினம்: செப். 5 இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபி தினத்தை முன்னிட்டு, செப். 5 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற மதுஅருந்தும் கூடங்கள் செயல்படாது என்று மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கிய நால்வா் மீது வழக்கு

கன்னியாகுமரியில் மீன்பிடி தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நால்வா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.கன்னியாகுமரி அந்தோணியாா் தெருவைச் சோ்ந்த அந்தோணி மகன் ஸ்தேவான் (18). மீன்ப... மேலும் பார்க்க