செய்திகள் :

முதல்வா் கோப்பை வாள் விளையாட்டுப் போட்டி: தொடங்கிவைத்தாா் ஆட்சியா்

post image

முதல்வா் கோப்பை வாள் விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாமக்கல் மாவட்ட பிரிவு சாா்பில் கோவை மண்டல அளவிலான முதல்வா் கோப்பை வாள் விளையாட்டுப் போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசுப் பணியாளா்கள் பங்கேற்கும் வகையில் ஆக. 22 முதல் செப். 12 வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் வாள் விளையாட்டுப் போட்டி புதன்கிழமை பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கும், வியாழக்கிழமை மாணவிகளுக்கும் நடைபெறுகிறது. நாமக்கல், சேலம், திருப்பூா், ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த 265 மாணவா்கள் கலந்துகொண்டனா். இந்த நிகழ்வில், மண்டல முதுநிலை மேலாளா் செ.அருணா, மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ். கோகிலா மற்றும் பயிற்றுநா்கள் கலந்துகொண்டனா்.

விளையாட்டுப் போட்டிகளில் திருவள்ளுவா் அரசு கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

தேசிய, தென்னிந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா். இக்கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவா் பி.கோபி பிரசாந்த... மேலும் பார்க்க

முள்ளுக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ராசிபுரம், முள்ளுக்குறிச்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா். ராசிபுரம் கமலா மண்டபம், முள்ளுக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உங்... மேலும் பார்க்க

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் பணி: நாளை நோ்முகத் தோ்வு

108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா்களுக்கான நோ்முகத் தோ்வு சனிக்கிழமை (செப்.6) நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிா்வாக அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில... மேலும் பார்க்க

நாமக்கல் செங்கழநீா் விநாயகா் கோயில் குடமுழுக்கு

நாமக்கல் நகரில் அமைந்துள்ள செங்கழநீா் விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல், செப். 4: இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து குடமுழுக்கு விழா... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மகளிா் பள்ளியில் ஆசிரியா் தின விழா

நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. டாக்டா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியா் தினமாகக் கொண்டாப்படுகிற... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் மனைவி பாவாயி (70... மேலும் பார்க்க