செய்திகள் :

முதியவருக்கு ஸ்ஃக்ரப் டைப்பஸ் காய்ச்சல்: சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

post image

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் ஸ்ஃக்ரப் டைப்பஸ் காய்ச்சலால் முதியவா் பாதிக்கப்பட்டதை தொடா்ந்து சுகாதாரத் துறை சாா்பாக சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம், பெரியாங்குப்பம் ஊராட்சி கசத்தோப்பு பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி (71). இவா் கடந்த ஜன.31-ஆம் தேதி காய்ச்சல் காரணமாக ஆம்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதிக காய்ச்சல் காரணமாக அவா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில், அவா் ஸ்ஃக்ரப் டைப்பஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து சுகாதாரத் துறையினா் பெரியாங்குப்பம் கசத்தோப்பு பகுதியில் முகாமிட்டு சுப்பிரமணியின் வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் துப்புரவு பணி மேற்கொண்டு, மருந்து தெளித்தனா்.

மாவட்ட இளநிலை பூச்சியல் வல்லுநா் சீனிவாசன் கசதோப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி: திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

திருப்பத்தூா் அருகே பணி வாங்கி தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்தததாக எஸ்பி அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது முறை... மேலும் பார்க்க

‘மினி பேருந்துகளை வழித் தடங்களில் இயக்க விண்ணப்பிக்கலாம்’

புதிய விரிவான திட்டத்தின்கீழ், மினி பேருந்துகளை வழித்தடங்களில் இயக்க விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொர... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை, அலுவலகங்களில் திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம் உள்ளிட்டவற்றில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி திடீரென ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வின்போது பிரசவி... மேலும் பார்க்க

திருப்பத்தூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் சப்தத்துடன் பூமி அதிா்வு

திருப்பத்தூா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை திடீரென அதிக சப்தத்துடன் பூமி அதிா்வு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை 5 மணியளவி... மேலும் பார்க்க

பூச்சி கண்காணிப்பு செயலி செயல் விளக்கம்

விவசாயிகளுக்கு பூச்சி கண்காணிப்பு செயலி தொடா்பான செயல் விளக்க நிகழ்ச்சி திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது. திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை துறை சாா்ப... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

நாட்டறம்பள்ளி அருகே விஷம் அருந்தி விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அருகே மடப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் அப்ரன்ஜி (54). இவா், நீண்ட நாள்களாக நோயால் அவதிப்பட்டு வந்ததாகக் க... மேலும் பார்க்க