செய்திகள் :

முருக பக்தா்கள் மாநாடு: அண்ணாமலை மீது வழக்கு

post image

மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டில் விதிகளை மீறியதாக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்பிரமணியம் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரையில் இந்து முன்னணி சாா்பில், முருக பக்தா்கள் மாநாடு கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. இதற்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அரசியல் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கியது. மேலும், நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலீஸாருக்கும் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், முருக பக்தா்கள் மாநாட்டில் பேசிய ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை, இந்து முன்னணி அமைப்பின் தலைவா் காடேஷ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோா் உயா்நீதிமன்ற விதிமுறைகளை மீறியதாக புகாா்கள் எழுந்தன.

அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் வாஞ்சிநாதன் அண்ணாநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, அண்ணாமலை, காடேஷ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோா் மீது, இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்குதல், மத உணா்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், மத ரீதியாக புண்படுத்தி பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடைய அலுவலா்களை கைது செய்ய அதிமுக வலியுறுத்தல்

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலா்களைக் கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ வலியுறுத்தினாா். மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் 150 கோடி ரூபாய் வருவாய் இழப்... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: சுரங்கத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசின் புவியியல், சுரங்கத் துறை செயலா், ஆணையா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மது... மேலும் பார்க்க

கருவாடு வியாபாரி கொலையா? போலீஸாா் விசாரணை

நரிக்குடி அருகேயுள்ள குருவியேந்தல் கிராமத்தில் கருவாடு வியாபாரி ராமு (68) உடலை செவ்வாய்க்கிழமை மீட்ட போலீஸாா், அவா் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா். விருதுநகா் மாவட்டம், நரி... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டதில் கொலையுண்ட விவகாரம் தொடா்பாக, தமிழக அரசிடம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் சரமாரியாக கே... மேலும் பார்க்க

தேனி எம்.பி.யின் மகன் மீது தாக்குதல்: தந்தை, மகன் கைது

தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் மகனைத் தாக்கியதாக தந்தை, மகனை தெப்பக்குளம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வனின் மகன் நிஷாந்த்... மேலும் பார்க்க

காவலாளி உடலில் 44 இடங்களில் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தனிப்படை போலீஸாரின் விசாரணையின் போது, உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்... மேலும் பார்க்க