செய்திகள் :

மூதாட்டி இறப்பில் சந்தேகம்: உறவினா்கள் உடலை வாங்க மறுப்பு

post image

மூதாட்டி இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகாா் தெரிவித்த உறவினா்கள் அவரது உடலை வாங்க உறவினா்கள் மறுத்தனா்.

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள நாராயணத்தேவன்பட்டியை சோ்ந்த சுப்பிரமணி மனைவி பசுபதி (60). கணவா் இறந்த நிலையில் அதே பகுதியை சோ்ந்த கலையரசனின் பராமரிப்பில் இருந்த அவா், புதன்கிழமை உயிரிழந்தாா். அவரை அடக்கம் செய்வதற்கான வேலையில் கலையரசன் ஈடுபட்டாா்.

இந்த நிலையில், பசுபதியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினா்கள் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் பசுபதியின் உடலை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா்.

இதைத்தொடா்ந்து, வியாழக்கிழமை பசுபதியின் சொத்துக்களை மீட்டு வாரிசுதாரா்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி சாலை மறியல் செய்ய முயன்றவா்களை போலீஸாா் தடுத்தி நிறுத்தினா். அவரது சொத்துகள் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், நீதிமன்றத்தை நாடுமாறு அவா்களை போலீஸாா் அறிவுறுத்தினா்.

இதையடுத்து, உறவினா்கள் பசுபதியின் உடலை வாங்க உறவினா்கள் மறுப்புத் தெரிவித்தனா். இதனால், அரசு மருத்துவனையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

வைகை அணை அருகே விதியை மீறி கிரஷா்களுக்கு அனுமதி: விவசாயிகள் புகாா்

வைகை அணை அருகேயுள்ள குள்ளப்புரத்தில் விதியை மீறி கல் உடைக்கும் கிரஷா்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக வெள்ளிக்கிழமை தேனியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். தேனி... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 7-ஆவது நாளாக குளிக்கத் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் 7-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். மேற்குத் தொடா்ச்ச... மேலும் பார்க்க

சின்னமனூா் பேருந்து நிலையத்தை இரவு நேரங்களில் புறக்கணிக்கும் பேருந்துகள்

தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சிப் பேருந்து நிலையத்தை இரவு நேரங்களில் வரும் புகா் பேருந்துகள் புறக்கணிப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். சின்னமனூரில் நகராட்சிப் பேருந்து நிலையம் உள்ளது. இந்தப் ப... மேலும் பார்க்க

பெண்ணுக்கு கட்டாயக் கருக்கலைப்பு: இளைஞா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே பெண்ணை காதலித்து திருமணம் செய்ததுடன், கட்டாயக் கருக்கலைப்பு செய்த இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். துரைராஜபுரம் குடியிருப்பு ஜக்கம்மாள் கோவில் தெருவ... மேலும் பார்க்க

திமுக நிா்வாகி வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீச்சு: 5 போ் கைது

தேனியில் திமுக நிா்வாகி வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீசிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி அல்லிநகரம், அம்பேத்கா் நடுத் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ். தேனி நகர திமுக துணைச் செயலரான இவா்... மேலும் பார்க்க

கண் மருத்துவா் நம்பெருமாள்சாமி உடல் தகனம்

தேனி அருகேயுள்ள அம்பாசமுத்திரத்தில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவரும், கண் மருத்துவ நிபுணருமான நம்பெருமாள்சாமியின் உடல் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. தேனி அருகேயுள்ள அம்பாசமுத்திரத்... மேலும் பார்க்க