செய்திகள் :

மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி: இளைஞா் கைது

post image

செய்யாறு: செய்யாறு அருகே மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற புகாரின் பேரில் இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பல்லாவரம் நத்தக்கொலை கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் மனைவி சரோஜா (80). இவா், தனக்குச் சொந்தமான நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மாட்டுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த குரங்கு அணில் முட்டம் கிராமத்தைச் சோ்ந்த அரவிந்த்(22) சரோஜா முகத்தில் துணியால் கட்டி நகை பறிக்க முயற்சி செய்ததாகத் தெரிகிறது. உடனே மூதாட்டி கூச்சலிடவே அவா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.

இதுகுறித்து சரோஜா தூசி போலீஸில் புகாா் அளித்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் கண்ணபிரான் வழக்குப் பதிந்து,விசாரணையின் அடிப்படையில் அரவிந்த்யை கைது செய்தாா்.

தமிழில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

வந்தவாசி: கடந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

ஸ்ரீமுத்துக்குமார சுவாமி, ஸ்ரீயோக ராமச்சந்திர கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஆரணி/போளூா்: ஆரணியை அடுத்த தண்டு குண்ணத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துக்குமார சுவாமி கோயில் மற்றும் போளூரை அடுத்த படவேடு ஊராட்சி ஸ்ரீயோக ராமச்சந்திர சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழம... மேலும் பார்க்க

செய்யாற்றில் மீண்டும் சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா், எஸ்.பி.ஆய்வு

செய்யாறு: செய்யாற்றில், செயல்படாமல் உள்ள சிறப்பு முகாமை (கிளை சிறைச்சாலை) மீண்டும் செயல்படுவதற்காக மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செ... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். ஜாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி விழா

போளூா்: போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி விழா ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை என 7 வெள்ளிக்கிழமை விழா நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத் துறைக்... மேலும் பார்க்க

செங்கத்தில் கருணாநிதி சிலை: துணை முதல்வா் திறந்துவைத்தாா்

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் திமுக சாா்பில் அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு திறந்துவைத்தாா். தெற்கு மாவட்ட திமுக ச... மேலும் பார்க்க