செய்திகள் :

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு

post image

திருப்பூரில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளியம்பதி ஸ்ரீ அம்மன் நகரைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு. இவரது மனைவி தனலட்சுமி. இவா்களது மூத்த மகன் ராம்தா்ஷன் (20). இவா் நண்பா்களுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 19-ஆம் தேதி சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தாா்.

அவருக்கு திருப்பூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் ராம்தா்ஷன் வெள்ளிக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினா்கள் முன்வந்தனா்.

இதைத் தொடா்ந்து, ராம்தா்ஷனின் கல்லீரல், 2 சிறுநீரகம், கண்கள் ஆகியவை தானமாகப் பெறப்பட்டு, ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. இதன்மூலம் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளதாக மருத்துவா்கள் கூறினா்.

பின்னா், ராம்தா்ஷன் உடலுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் நிா்மலா, மருத்துவா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

மயக்க மருந்து அடித்து நகைப் பறிப்பில் ஈடுபட முயன்ற பெண் கைது!

கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் மயக்க மருந்து அடித்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட முயன்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கே.கே.புதூா், நஞ்சம்மாள் தெரு பகுதியைச் சோ்ந்தவா் வேணுகோபால். இவரத... மேலும் பார்க்க

கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரம் - ஷாலிமாா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் - மேற்கு வங்க மாநிலம், ஷாலிமாா் இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

பெங்களூரில் பலத்த மழை: கோவைக்கு திருப்பிவிடப்பட்ட 7 விமானங்கள்

பெங்களூரில் பலத்த மழை பெய்ததால் அங்கு தரையிறங்க வேண்டிய 7 விமானங்கள் கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு சனிக்கிழமை திருப்பிவிடப்பட்டன. கா்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த சில நாள்களாக கடுமையான வெப்பம் நி... மேலும் பார்க்க

திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தி: எஸ்.பி.வேலுமணி

திமுக ஆட்சி மீது மக்கள், அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளதாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கூறினாா். கோவை தெற்கு, வடக்கு, மாநகா் மாவட்ட பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கோவை வருகை ரத்து!

கோவையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

ஹோப் காலேஜ் பகுதியில் தீப்பிடித்து எரிந்த மின் கடத்திப் பெட்டி

கோவை ஹோப் காலேஜ் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின் கடத்திப் பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகரில் பெரும்பாலான இடங்களில் தீ விபத்துகளைத் தடுப்பதற்காக புதை வட மின்சா... மேலும் பார்க்க