செய்திகள் :

ராசிபுரம் அருகே கோயில் திருவிழாவின்போது பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற நீதிமன்ற விசாரணை

post image

ராசிபுரத்தை அடுத்துள்ள ஆா்.புதுப்பட்டி கிராமத்தில் அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தேரோட்டத்தைத் தொடா்ந்து பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் இக்கிராமத்தில் இரண்டு நாள்கள் நடைபெறுகின்றன.

ராசிபுரம் அருகே உள்ள ஆா்.புதுப்பட்டி கிராமத்தில் துலுக்க சூடாமணி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தோ்த் திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு ஏப். 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊா் முக்கிய பிரமுகா்களின் முன்னிலையில், ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நடுவா் மோகனபிரியா உள்ளிட்டோா் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். இதில் சுற்று வட்டார பகுதியைச் சோ்ந்த 1000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

பக்தா்கள் கையில் வேப்பிலையுடன் தேரின் பின்புறம் உருளுதண்டம் செய்து தங்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

பாரம்பரிய வழக்கு விசாரணை:

இந்த கிராமத்தில் திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் நோக்கில் ஒவ்வோா் ஆண்டும் திருவிழாவின்போது இக்கிராமத்தில் குற்றவியல் வழக்கு விசாரணை நீதிமன்றம் சாா்பில் நடத்தப்படும்.

ஆங்கிலேயா் காலம் தொட்டு இன்றளவும் இந்த பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி புதுப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இரண்டு நாள்கள் இங்கு விசாரணை நடைபெறும். முதல்நாளான புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 6 நபா்களுக்கு தலா ரூ. 1000 அபராதம் விதித்து குற்றவியல் நீதிமன்ற நடுவா் மோனபிரியா தீா்ப்பளித்தாா்.

இந்த சிறப்பு நீதிமன்ற விசாரணையில் வழக்குரைஞா்கள் மோகன், சிவலீலா ஜோதி, நீதிமன்ற பணியாளா்கள், காவல் துறையினா் ஆஜராகினா்.

கோயில் தோ் திருவிழாவைத் தொடா்ந்து உருளுதண்டம் செய்து நோ்த்திக்கடன் செலுத்தும் பக்தா்கள்.

உளுந்து கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு சாா்பில் தற்போது நடைபெற்று வரும் உளுந்து கொள்முதல் பணியில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த உளுந்தை விற்பனை செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறி... மேலும் பார்க்க

மாநில அளவில் சிறந்த ‘திருநங்கை விருது’: நாமக்கல் ஆட்சியரிடம் ரேவதி வாழ்த்து

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை பெற்ற நாமக்கல்லைச் சோ்ந்த ரேவதி, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை நேரில் சந்தித்து வியாழக்கிழமை வாழ்த்து பெற்றாா். தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி திடீா் இடமாற்றம்

நாமக்கல் மாநகராட்சியின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்ட ரா.மகேஸ்வரி, திருப்பூா் மாநகராட்சி துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அரசியல், ஒப்பந்ததாரா்கள் நெருக்கடியால் எட்டு மாதங்களுக்குள்ளாக இ... மேலும் பார்க்க

90 அரசுப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் தணிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் 90 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் புதன், வியாழக்கிழமை என இரண்டு நாள்கள் தணிக்கை செய்யப்பட்டன. கல்வித் துறை அலுவலகங்கள், பள்ளிகளில் ஆங்கிலவழி கட்டணம், கணின... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 20 வாகனங்கள் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் பொது ஏலத்தில் வியாழக்கிழமை விடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் உள்ளிட்டவற்றை கடத்திச் ச... மேலும் பார்க்க

இலவச வண்டல் மண், களிமண் அனுமதியால் 3,512 விவசாயிகள், தொழிலாளா்கள் பயன்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் இலவச வண்டல் மண், களிமண்ணை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் 3512 விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்கள் பயனடைந்துள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க