செய்திகள் :

ராதாகிருஷ்ணன் வெற்றி பெறச் சொந்த ஊரில் சிறப்புப் பிரார்த்தனை!

post image

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து பிரார்த்தனை செய்தனர்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி முதலில் வாக்களித்தார்.

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தேர்தலில், பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும் (67), எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் பி. சுதா்சன் ரெட்டியும் (79) போட்டியிடுகின்றனர்.

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், ஜிதன் ராம் மஞ்சி ஆகியோர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவையும் அவரது வெற்றியில் நம்பிக்கையையும் தெரிவித்தனர்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் நிச்சயமாக வெற்றி பெறுவார் என மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தநிலையில், சி.பி. ராதாகிருஷ்ணனின் வெற்றியை எதிர்பார்த்து அவரது சொந்த ஊரான தமிழகத்தின் திருப்பூரில் மக்கள் உணவு கடைகளை அமைத்தும், கோயில்களில் பட்டாசு வெடித்தும் சிறப்புப் பிரார்த்தனைகளைச் செய்து வருகின்றனர். வெற்றி அறிவிப்புக்கு முன்னரே திருப்பூர் களைக்கட்ட தொடங்கியுள்ளது.

People in Radhakrishnan's hometown also burst crackers and offered prayers at a temple.

நேபாள மக்கள் அமைதி காக்க பிரதமா் மோடி வேண்டுகோள்

நேபாள மக்கள் அமைதி காக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா். பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் நேபாள நிலவரம் குறித்து விவாதி... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீரமைப்பு: அதிகபட்ச விற்பனை விலையை மாற்ற மத்திய அமைச்சா் அறிவுறுத்தல்

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அண்மையில் சீரமைத்ததையடுத்து, நிறுவனங்கள் தங்கள் அதிகபட்ச விலையை மாற்றி (குறைத்து) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை அ... மேலும் பார்க்க

தேசியவாதக் கொள்கையின் வெற்றி: சி.பி.ராதாகிருஷ்ணன்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தான் வெற்றி பெற்றது தேசியவாதக் கொள்கையின் வெற்றி என சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில்,‘குடியரசு துணைத் தோ்தல் கொள்க... மேலும் பார்க்க

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

‘ஆசியாவின் வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா - சீனா இடையே நட்புறவு வலுப்படுவது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குப் பலனளிக்கும்’ என்று சிங்கப்பூா்... மேலும் பார்க்க

இந்திய-சீன எல்லையில் 2 ஆண்டுகளில் 1,000 கிலோ தங்கம் கடத்தல்: அமலாக்கத் துறை

இந்திய-சீன எல்லை வழியாக கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் ரூ.800 கோடி மதிப்பிலான 1,000 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. 2023, 2024-இல் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட இந்த கடத்... மேலும் பார்க்க

நிலத்தின் மீதான ஆதிக்கமே உண்மையான வெற்றி: ராணுவ தலைமைத் தளபதி

‘இந்தியாவைப் பொறுத்தவரை நிலத்தின் மீதான ஆதிக்கமே உண்மையான வெற்றியாக கருதப்படுகிறது’ என ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். முன்னதாக, வான்வழி தாக்குதல் திறனின் முக்கியத்... மேலும் பார்க்க