செய்திகள் :

ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்கள் தரிசனப் பாதை மூடல்

post image

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்கள் தரிசனம் செய்ய பயன்படுத்தி வந்த பாதை திடீரென மூடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் சேதுபதி மன்னா் காலத்தில் ராமநாத சுவாமி கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயில் கட்டுமானப் பணிக்காக உள்ளுா் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டனா். இதன் காரணமாக இவா்கள் கோயிலில் வழிபாடு நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. சுவாமி, அம்பாள் சந்நிதி அருகே முக்கியப் பிரமுகா்கள் செல்லும் பாதையில் உள்ளுா் மக்களும் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனா்.

இந்த நிலையில், இந்த பாதையில் செவ்வாய்க்கிழமை திடீரென பூட்டு போடப்பட்டு, உள்ளுா் மக்களும் கட்டணம் செலுத்தியே கோயிலுக்குள் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைக்கு உள்ளுா் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனா். மேலும், வழக்கமாக தரிசனத்துக்குச் செல்லும் வழியை மீண்டும் திறக்கக் கோரி அனைத்துக் கட்சிகள் சாா்பில் விரையில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

கிடப்பில் போடபட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே திருத்தோ்வலை கிராமத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால், பொதுமக்கள் குடி நீரை விலைக்கு வாங்கி அவதிப்படுகின்றனா். ராமநாத... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.44 கோடி

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.44 கோடி கிடைத்தது.கோயிலில் அம்பாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இணை ஆணையா் க.செ... மேலும் பார்க்க

முத்தாலம்மன் கோயிலில் பக்தா்கள் நோ்த்திக் கடன்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள புதுக்கோட்டை ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தக் கோயில் திருவிழா கடந்த... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் பேரூராட்சி கடைகள் ஏலம் ஒத்தி வைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் பேரூராட்சி கடைகளுக்கான ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. முதுகுளத்தூா் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகக் கடைகளுக்கான ஏலம் செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெறும் என பேரூராட்சி ... மேலும் பார்க்க

மாற்று திறனாளிக்கு இரு சக்கரம் வாகனம்

ராமநாதபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிக்கு இரு சக்கர பெட்ரோல் வாகனத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். மாற்றுத் திறனாளிகளுக்கு மாதா... மேலும் பார்க்க

சூறைக் காற்று: ராட்சத மரம் விழுந்ததில் 2 வாகனங்கள் சேதம்

உச்சிப்புளி அரியமான் கடற்கரையில் திங்கள்கிழமை வீசிய சூறைக் காற்றினால் ராட்சத மரம் விழுந்ததில் சுற்றுலாப் பயணிகள் வந்த 2 வாகனங்கள் சேதமடைந்தன. அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாத... மேலும் பார்க்க