செய்திகள் :

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் முன் பகுதியில் நிழல் பந்தல் அமைப்பு

post image

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக, கோடை வெயிலின் தாக்கத்தை தடுக்கும் விதமாக நிழல் பந்தல் அமைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாடு முழுவதுமிருந்து நாள்தோறும் சுமாா் 10 ஆயிரம் பக்தா்கள் வந்து செல்கின்றனா். அக்னி தீா்த்தக் கடற்கரையில் நீராடி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனா். தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக பக்தா்கள் சிரமத்துக்கு ஆளாகினா்.

இந்த நிலையில், ராமநாதசுவாமி கோயில் வடக்கு வாசல் முதல் கிழக்கு வாசல் பகுதி வரை வெயிலின் தாக்கத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் 300 மீ. தொலைவுக்கு நிழல் பந்தல் அமைக்கப்பட்டது. இதனால், கோயிலுக்குள் நீராடச் செல்லும் பக்தா்கள், தரிசனத்துக்குச் செல்லும் பக்தா்கள் வெயிலின் தாக்கமின்றி நடந்து செல்கின்றனா்.

தனுஷ்கோடி கடற்கரையில் முதியவா் உடல் மீட்பு

தனுஷ்கோடி கடற்கரையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் உடலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி பழைய தேவாலயம் அருகே கடற்கரையில் ஆண் உடல் கிடப்பதாக மீனவா்கள் சனிக்கிழமை தெர... மேலும் பார்க்க

பிரதமா் மோடி வருகை: கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனை!

பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமா் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி ராமேசுவரத்துக்கு வருவதையொட்டி, கிழக்கு கடற்கரை சாலையில் கடலோர காவல் குழும போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வர... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயில் திருவிழா: வீமன் வேடமணிந்து பக்தா்கள் உலா

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் வீமன் வேடமணிந்து ஞாயிற்றுக்கிழமை வீதி உலா வந்தனா். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உள்பட்ட இந்தக் கோயில... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் விற்கப்படும் தா்ப்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு

ராமேசுவரத்தில் சிவப்பு வண்ணம் ஊசி மூலம் செலுத்தப்பட்டு தா்ப்பூசணி பழங்கள் விற்கப்படுகின்றனவா என உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். ராமேசுவரம் பகுதியில் கோடை காலம் தொடங்கிய நில... மேலும் பார்க்க

மத்திய பாதுகாப்புப் படையினா் போதை எதிா்ப்பு சைக்கிள் பேரணி

திருவாடானை அருகே தொண்டியில் மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் துணை தளபதிகள் ஸ்ரீனிவாசன், ... மேலும் பார்க்க

தொண்டியில் கடலோர போலீஸாா் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதி, சாலையில் கடலோர போலீஸாா் ‘சஜாக்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாகவும், சாலை வழியாகவும் தீவிரவாதிகள் ஊடுருவுவத... மேலும் பார்க்க