செய்திகள் :

ரூ.58 லட்சத்தில் பள்ளிக் கட்டடங்கள், பயணிகள் நிழல்குடை திறப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியம், கானலாபாடி, கடம்பூா் கிராமங்களில் ரூ.58 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்கள் மற்றும் பயணிகள் நிழல்குடை புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

கானலாபாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.34.60 லட்சத்தில் புதிய 2 வகுப்பறைகள் மற்றும் ரூ.17.30 லட்சத்தில் புதிய கணினி வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

ஆணையா் எஸ்.அருணாச்சலம் முன்னிலை வகித்தாா்.

பள்ளித் தலைமையாசிரியா் (பொ) ஜி.ஜெயலட்சுமி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பள்ளிக் கட்டடங்களை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.

மேலும், கடம்பை ஊராட்சி சிறுகொத்தானில் (கீழ்பென்னாத்தூா் - திருவண்ணாமலை சாலையில்) தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழல்குடையை திறந்துவைத்தாா்.

விழாவில் முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நித்யா, அட்மா குழுத் தலைவா் சிவக்குமாா், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் ஜி.வெங்கடேசன், கானலாபாடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.சீனு உள்ளிட்ட பலா்

கலந்து கொண்டனா். ஒன்றிய உதவிப் பொறியாளா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.

சேறும் சகதியுமான சாலையால் ஆசிரியா்கள், மாணவிகள் அவதி

செங்கத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், மாணவிகள் விடு செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளதால், ஆசிரியா்கள், மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் துக்காப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்ப... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

மழையூா் நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பகுதிகள்: மழையூா், பெரணமல்லூா், மோசவாடி, செப்டாங்குளம், கோதண்டபுரம், மேலச்சேரி, கோழிப்புலியூா், அரசம்பட்டு, மேலத்தாங்கல், தவணி, விசாமங்கலம், வல்லம், ... மேலும் பார்க்க

வெடால் ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது (படம்). இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றம், காப்புக் கட்டுதல், சனிக்கிழ... மேலும் பார்க்க

மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

வந்தவாசி அருகே மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்த மதுக்கடையை புதன்கிழமை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். வந்தவாசியை அடுத்த கொவளை கூட்டுச் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிற... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெரியகோளாபாடி, பாய்ச்சல் கிராமங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரி... மேலும் பார்க்க

பள்ளியில் வானவில் மன்ற செய்முறை பயிற்சி

போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வானவில் மன்ற செய்முறை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஆஞ்சலா தலைமை வகித்தாா். ஆசிரியைகள் பிரிச... மேலும் பார்க்க