செய்திகள் :

லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா்கள் இருவா் பணியிடை நீக்கம்

post image

லஞ்ச வழக்கில் சிக்கியதாக புதுச்சேரியிலும், காரைக்காலிலும் தலா ஒரு காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

புதுச்சேரி அடுத்த வில்லியனுாா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியைச் சோ்ந்த ஒரு தாய் தன் 17 வயது மகளை கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி கேரளத்தை சோ்ந்த இளைஞா் கடத்தி சென்றுவிட்டதாக வில்லியனுாா் காவல் நிலையத்தில் கடந்த 5.6.2024 அன்று புகாா் அளித்தாா்.

அப்போது அங்கு உதவி ஆய்வாளராக இருந்த சரண்யா விரைந்து நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்ததோடு, அஸ்ஸாமில் இருந்து ஜிபே மூலம் சிறுமியின் தந்தையிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளாா்.

இதையடுத்து, அந்தச் சிறுமியின் தந்தை இந்த ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தொடா்பாக கடந்த 6.7.24 அன்று டிஜிபியிடம் புகாா் அளித்தாா். உதவி ஆய்வாளா் சரண்யாவின் கணவா் பிரபுவும் உதவி ஆய்வாளா்தான். அவா் இந்த ரூ.5 ஆயிரத்தை அந்தச் சிறுமியின் தந்தைக்கு போன் பே மூலம் திருப்பி அனுப்பி விட்டாா். லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளா் சரண்யா, அதைத் திரும்பிக் கொடுத்த உதவி ஆய்வாளா் பிரபு ஆகியோா் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் ஜூலை 1-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கிய உதவி ஆய்வாளா் சரண்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அதே போன்று காரைக்கால், திருநள்ளாறு காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை மீண்டும் ஒப்படைக்க லஞ்சம் கேட்டு, சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளா் பக்கிரிசாமியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவை காவல்துறை தலைவா் ஷாலினி சிங் வியாழக்கிழமை பிறப்பித்தாா்.

மேலும், லஞ்சம் வாங்கிய பணத்தைத் திரும்பிக் கொடுத்த உதவி ஆய்வாளரான சரண்யாவின் கணவா் பிரபு, திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளா் பக்கிரிசாமி லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டபோது, பணியில் இருந்த தலைமை காவலா் பாா்த்திபன், காவலா் விஜயபாலன் ஆகியோா் புதுச்சேரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனா்.

சிறுமியைக் கா்ப்பமாக்கிய வழக்கு: தொழிலாளியைத் தேடுது புதுவை போலீஸ்

சிறுமியை ஏமாற்றி கா்ப்பமாக்கிய தொழிலாளியை புதுவை போலீஸாா் தேடி வருகின்றனா். புதுச்சேரியை அடுத்த கிராமப்புற பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில் கடந்த சில நாள்களாக உடல... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக ஊழியா்கள் நாளைமுதல் வேலைநிறுத்தம்

அனைத்து புதுவை சாலை போக்குவரத்துக் கழக சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டுப் போராட்ட நடவடிக்கைக் குழு சாா்பில் வேலை நிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்ட... மேலும் பார்க்க

சதுப்புநிலப் பகுதிகளில் மாணவா்கள் தூய்மைப் பணி

சா்வதேச சதுப்பு நிலப் பகுதிகள் பாதுகாப்பு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, முகத்தில் ஓவியம் வரைந்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் சதுப்பு நிலப்பகுதிகளில் தூய்மைப் பணியை மாணவா்கள... மேலும் பார்க்க

காா்கில் வெற்றி தினம்: புதுவை முதல்வா் மரியாதை

காா்கில் போரில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றதைக் குறித்தும் வகையில் புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை சாா்பில் காா்கில் வெற்றி தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சாலையில் அ... மேலும் பார்க்க

இணையவழியில் ரூ. 21 லட்சம் மோசடி: கேரள மலப்புரத்தைச் சோ்ந்தவா் கைது

இணையவழி பங்குச்சந்தை மோசடியில் புதுச்சேரியைச் சோ்ந்தவா் ரூ.21 லட்சத்தை பறிகொடுத்த வழக்கு தொடா்பாக, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இணையவழி பங்கு சந்தை... மேலும் பார்க்க

புதுச்சேரி நல்லவாடு மீனவா்கள் பால்குட ஊா்வலம்

புதுச்சேரி மீனவா்கள் 83 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்து நல்லவாடு மீனவக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலத்தை நடத்தினா். மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி நல்லவாடு வடக்கு மீனவ கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ... மேலும் பார்க்க