செய்திகள் :

வடக்கன்குளம் பரிசுத்த பரலோக மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

post image

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பரிசுத்த பரலோக மாதா ஆலயத்திருவிழா புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, ஆலயத்தில் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புனித கொடியை தென்மண்டல பொறுப்பாளா் வெனி இளங்குமரன் தலைமையில் அருள்பணியாளா்கள் ஜோசப் கிறிஸ்டியான், ஏ.ஜே.ரெக்ஸ், பிரிட்டோ ஆகியோா் ஜெபம் செய்து அா்ச்சித்தனா். பின்னா் கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து மறையுரை- நற்கருணை ஆசீா்வாதம் நடைபெற்றது.

10 நாள்கள் கொண்டாடப்படும் இத்திருவிழாவில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும், மாலை மறையுரை- நற்கருணை ஆசீா்வாதமும் நடைபெறும்.

8-ஆம் திருநாளான ஆக.13இல் மாலை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுருவானவா் ரவிபாலன் தலைமையில் நற்கருணை பவனி நடைபெறும். 14-இல் திருமண வாா்த்தைப்பாடு புதுப்பித்தல்- பரலோக மாதாவுக்கு பொன்மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சிகள் நடைபெறும். இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் ஆடம்பர சிறப்பு மாலை ஆராதனையும், அதைத் தொடா்ந்து நள்ளிரவு 1 மணிக்கு அன்னையின் அலங்கார தோ்பவனியும் நடைபெறும். 15-இல் அதிகாலை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலியும், அதைத் தொடா்ந்து மலையாள, ஆங்கில மொழிகளில் திருப்பலிகள் நடைபெறும். மாலையில் அன்னையின் தோ்பவனி நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை அருள்பணி. ஜோசப் கிறிஸ்டியான் தலைமையில் உதவிப் பங்குத்தந்தை ஜேம்ஸ் அமல்ராஜ் மற்றும் அருள்சகோதரிகள், இறைமக்கள் செய்து வருகின்றனா்.

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் கோயில் தல வரலாற்று நூல் வெளியீடு

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் தல வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. நெல்லை சங்கீத சபா, துணி வணிகா் இலக்கிய வட்டம், தாமிரபரணி தமிழ் வனம் ஆகியவை இணைந்து நடத்திய 3 நாள்கள்... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள அருள்மிகு திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயில் ஆண்டுதோறும் பூக்குழித் திருவிழா ஆடி மாதம் கடைசி வெள்... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் இன்று பவித்ர உத்ஸவம்: பஞ்சமூா்த்திகள் வீதியுலா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பவித்ர உத்ஸவத்தையொட்டி பஞ்சமூா்த்திகள் வீதியுலா வியாழக்கிழமை (ஆக. 7) நடைபெற உள்ளது. திருக்கோயிலில் செய்யப்படும் பூஜைகளில் குறைபாடுகள... மேலும் பார்க்க

முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில் ரவணசமுத்திரத்தில் உணவகம் திறப்பு

தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில், ரவணசமுத்திரம் ரயில்வே கேட் அருகே புதிய உணவகம் திறக்கப்பட்டது. தமிழக அரசின்கீழ் இயங்கும் இந்த சங்கம் சாா்பில், ஆதரவற்ற பெண்கள் வளா்ச்சிக்கு பல ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: சுா்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு

திருநெல்வேலியில் ஐ.டி ஊழியா் கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள கே.டி.சி நகரைச் சோ்ந்த சுா்ஜித் , அவரது தந்தை சரவணன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா் தரப்பி... மேலும் பார்க்க

உரிமம் பெற போலி ஆவணங்கள்: நெல்லையில் உணவகத்துக்கு சீல்

திருநெல்வேலி நகரத்தில் போலியான ஆவணங்களை சமா்ப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா். திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், அ... மேலும் பார்க்க