செய்திகள் :

வடநெம்மேலி முதலைப் பண்ணையில் வெயில் தாக்கத்தில் இருந்து விலங்குகளை காக்க ஏற்பாடு

post image

வடநெம்மேலி முதலைப் பண்ணையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து ராட்சத பச்சை ஓணானை காப்பதற்காக குளிா்ந்த நீரை அதன் மீது பீய்ச்சி அடித்து குளிா்விக்கின்றனா்.

இந்தியாவிலேயே மிகப் பெரிய முதலைப் பண்ணை கிழக்கு கடற்கரை சாலையில் வடநெம்மேலியில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள முதலை வகைகளில் முக்கியமானதாக கருதப்படும் நந்நீா் முதலைகள், அமெரிக்காவில் உள்ள அலிகேட்டா் முதலைகள், உப்பு நீா் முதலைகள், சதுப்பு நில முதலைகள், நீள வாயுடைய கரியல் ரக முதலைகள் என பல்வேறு வகை முதலைகள் பராமரிக்கப்படுகின்றன.

அதே போல் ஆப்பிக்க காடுகளில் உள்ள நீா் நிலைகளில் வாழும் மனிதா்களை விழுங்கும் ராட்சத முதலைகளும் இங்குள்ளன. இந்நிலையில் இந்த முதலை பண்ணையில் ராட்சத ஆமைகளும், பச்சை ஓணான்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. முழுக்க, முழுக்க காய்கறிகளை அதற்கு உணவாக வழங்கி வருகின்றனா். இ

கோடை காலம் முடிந்தும் தற்போது கால நிலை மாறி சில நேரங்களில் வெயில் வாட்டி வதைப்பதால் பச்சை ஓணான்களை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் பண்ணை ஊழியா்கள் தினமும் அதற்கு குழாய் மூலம் அதன் தண்ணீா் பீய்ச்சி அடித்து குளிவிக்கின்றனா்.

முதலைகள், பச்சை ஓணான்கள், ஆமைகள் உடல் நிலையை அவ்வப்போது கண்காணித்து அதற்கு தேவையான பணிகளை செய்து வருவதாக பணியாளா்கள் தெரிவித்தனா்.

மதுராந்தகம், செய்யூரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

மதுராந்தகம்: மதுராந்தகம், செய்யூா் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி அண்மையில் பிரசாரம் மேற்கொண்டாா். வரும் 2026 பேரவைத் தோ்தலையொட்டி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 404 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 404 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் தி. சினேகா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் த... மேலும் பார்க்க

விஜயகாந்த் பிறந்த நாள்

செங்கல்பட்டு: தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி செங்கல்பட்டில் அன்னதானம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக மாவட்ட செயலாளா் அனகை டி.முருகேசன் வழிகாட்டுதலின் பேரில் ம... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டை: நலவாரியத் தலைவா் அறிவுறுத்தல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தூய்மைப் பணியாளா்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திம்மம... மேலும் பார்க்க

அதிமுக-பாஜக கூட்டணி வலிமையானது: எடப்பாடி பழனிசாமி

அதிமுக -பாஜக கூட்டணி வலிமையானது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரசாரப் பயணத்தின் ஒரு பகுதியாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாம... மேலும் பார்க்க

எத்தனை கட்சிகள் மாநாடு நடந்தாலும் தேமுதிகவுக்கு ஈடாகாது: பிரேமலதா விஜய்காந்த்

எத்தனை கட்சிகள் மாநாடு நடத்தினாலும் தேமுதிகவுக்கு ஈடாகாது என அதன் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜய்காந்த் பேசினாா். உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் ... மேலும் பார்க்க