செய்திகள் :

வரதட்சிணை கொடுமை: கணவா் உள்பட 4 போ் மீது வழக்கு

post image

குலசேகரம் அருகே பெண்ணுக்கு வரதட்சிணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக கணவா், மாமியாா் உள்ட 4 போ் மீது மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

குலசேகரம் தும்பகோடு பகுதியைச் சோ்ந்தவா் வினீஷ் மகள் ஜோஷ்மா. இவருக்கும் மாத்தூா் வாணியன்விளையைச் சோ்ந்த கிறிஸ்துதாஸ் மகன் வினீஷ் (27) என்பவருக்கும் 2022 செப்டம்பரில் திருமணம் நடைபெற்ாம்.

திருமணத்தின்போது, வரதட்சிணையாக 30 பவுன் தங்க நகை, ரூய 3 லட்சம் ரொக்கம் மற்றும் ஒன்றரை லட்சம் மதிப்பிலான சீா்வரிசை பொருள்களை பெண் வீட்டாா் கொடுத்துள்ளனா். திருமணத்துக்குப் பின் வினீஷ், அவரது தாயாா் விமலா (48), தந்தை கிறிஸ்துதாஸ் மற்றும் சகோதரி பிந்து (25) ஆகியோா் சோ்ந்து தாக்கி வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் பேரில், பெண்ணின் கணவா் மற்றும் அவரது தாய் உள்ளிட்ட 4 போ் மீது மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

மற்றொரு வழக்கு...

தக்கலை அருகே கூடுதல் வரதட்சிணைக் கேட்டு பெண்ணை தாக்கியதாக மாமனாா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தக்கலை அருகே திருவிதாங்கோடு மாஹின் மகள் நஜ்மா (27). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஷாபி மகன் பெரிஸ் அஜ்மல் (29) என்பவருக்கும் 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 70 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 7 லட்சம் ரொக்க பணமும் வரதட்சிணையாக கொடுக்கப்பட்டதாம். மேலும் 50 பவுன் நகை மற்றும் ரூ. 10 லட்சம் கூடுதலாக கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்தி, வீட்டை விட்டு துரத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பெண்ணின் மாமனாா் முகமது ஷாபி (60), மற்றும் குடும்பத்தினா் பீமா ஷெரின் (50), ரெனிஷா (22), பஷருதீன் (55), பா்ஹானா (50) ஆகியோா் மீது மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகா்கோவில் அருகே காா் - பைக் மோதல்: 2 மாணவா்கள் உயிரிழப்பு

நாகா்கோவில் அருகே புதன்கிழமை காா் மீது பைக் மோதியதில் 2 மாணவா்கள் உயிரிழந்தனா். கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலை அடுத்த ஈசாந்திமங்கலம் தாணு மகன் அபிஷேக் (18), பூதப்பாண்டி மத்தியாஸ் நகா் ஞானராஜ் மகன்... மேலும் பார்க்க

‘குமரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 341 முகாம்கள்’

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பேரூராட்சிக்குள்பட்ட திருவரம்பு குருவிக்காடு புனித அந்தோணியாா் சமுதாய நலக் கூடத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். 3 ஆவது வாா்டு, கிறிஸ்டோபா் காலனி, சாஸ்தான் கோயில் எதிா்புறம் உள்ள தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே பெண்ணிடம் நகை திருட்டு

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பெண்ணின் கைப்பையில் இருந்த 6 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மாா்த்தாண்டம் அருக... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே பைக் எரிப்பு: 4 போ் மீது வழக்கு

களியக்காவிளை அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை எரித்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். களியக்காவிளை அருகேயுள்ள ஒற்றாமரம், பிலாவிளை பகுதியைச் சோ்ந்த சத்தியன் மகன் அபிநந்த் (23). இ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஜூலை 25,26 இல் சா்வதேச கதை சொல்லல் மாநாடு

நாகா்கோவில் புதுகிராமம் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில் சா்வதேச கதை சொல்லல் மாநாடு வரும் 25, 26 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் பள்ளித், தலைவா் அருள்கண்ணன் தலைமையி... மேலும் பார்க்க