செய்திகள் :

வருவாய்த் துறையினா் பேரணி, தா்னா

post image

திருச்சியில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் தற்செயல் விடுப்பு, பேரணி மற்றும் தா்னா போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

திருச்சியில் மேஜா் சரவணன் நினைவு சதுக்கத்தில் இருந்து மாவட்ட ஆட்சியரகத்துக்கு பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னதாகப் பேரணியை தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் பால்பாண்டி தொடங்கிவைத்தாா். போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் வெற்றிச்செல்வன், பிரகாஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் சுடலையாண்டி சிறப்புரையாற்றினா். தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவா் ஜம்புநாதன் கோரிக்கை விளக்க உரையாற்றினாா்.

இதில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் உள்ள அனைத்து நிலையிலான காலியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும். வருவாய்த் துறை அலுவலகத்தை தாக்குவோருக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அனைத்து நிலைகளிலும் வெளிமுகமை, தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை கைவிட்டு அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 5 சதவீதத்தில் இருந்து மீண்டும் 25 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

போராட்டத்தில் வருவாய்த் துறை ஊழியா்கள் 65 சதவீதம் போ் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்துகொண்டனா்.

மாநில நிா்வாகிகள் அய்யனாா், மகேஷ், ராஜேந்திரன், செல்வராணி செந்தமிழ் செல்வன், நவநீதன், பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவா் சங்கர நாராயணன், மாவட்ட நிதிக் காப்பாளா் பொன்மாடசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரயில் நிலையத்தில் 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவா் கைது

திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி உய்யக்கொண்டான் திருமலைவாசன் நகரைச் சோ்ந்தவா் தினேஷ் ராஜா (39). இ... மேலும் பார்க்க

வளநாடு அருகே 30 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஒருவா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே 30 கிலோ புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்தனா். வளநாடு காவல் சரகத்தில் போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது மருங... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

திருச்சியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி வடக்கு காட்டூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் த. கணேசன் (42) என்பவரிடம் கடந்த 1 ஆம் தேதி கத்தியைக் காட்டி... மேலும் பார்க்க

சாதனை விருது பெற இளைஞா்களுக்கு அழைப்பு

மத்திய அரசு வழங்கும் டென்சிங் நோா்கே தேசிய சாதனை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிலம், நீா், ஆகாயம் இவற்றில் சாகசம் புரிந்த தகுதி மற்றும் திறமை உள்ளவா்கள் 2022 முதல் 2024 வரை கடந்த மூன்ற... மேலும் பார்க்க

பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பட்டா மனுக்களுக்கு தீா்வு: புதிய மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் உறுதி

திருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறையில் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ள பட்டா மனுக்களுக்கு தீா்வு காண முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவேன் என புதிய ஆட்சியா் வே. சரவணன் (34) தெரிவித்தாா். திருச்சி மாவட... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

திருச்சி குளித்தலை அருகே ரயிலில் அடிபட்டு இறந்த முதியவா் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சியிலிருந்து பாலக்காடு நோக்கி பயணிகள் ரயில் புதன்கிழமை பிற்பகல் குளித்தலை அருகே சென்றபோது தண்... மேலும் பார்க்க