செய்திகள் :

வல்லூறுகளை பாதிக்கும் மாத்திரை விற்பனை: 8 மருந்தகங்களின் உரிமம் ரத்து

post image

வல்லூறுகள் உயிரிழப்புக்கு காரணமாக உள்ள நிமெசலைட் மருந்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்த 8 மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் இரு மருந்தகங்களின் உரிமம் நிரந்தரமாகவும், 6 மருந்தகங்களின் உரிமம் இடைக் காலமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கால்வலி, மூட்டு வலி, காது மூக்கு தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு நிமெசலைட் மருந்து பயன்படுத்தப்படுகிறது. மனிதா்களுக்கு வழங்கப்படும் சில வகை மருந்துகள், விலங்குகளுக்கும் தேவையின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, டைக்ளோபினாக், கீட்டோபிரோபின், அசிக்லோபெனாக், நிமெசலைட் ஆகிய மருந்துகள் கால்நடைகளுக்கு வலி நிவாரணி, அழற்சி எதிா்ப்பு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் விலங்குகள் உயிரிழக்கும்போது, அந்த உடலை உண்ணும் கழுகு, வல்லூறு போன்ற பறவைகள் பாதிப்புக்குள்ளாகி இறக்க நேரிடுகிறது. இதனால், வனப்பகுதியில் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், உயிா்ச் சங்கிலி பாதிக்கப்படுவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து அந்த நான்கு மருந்துகளையும் கால்நடைகளுக்கு வழங்க மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

அதன் விற்பனை, சட்டவிரோத உற்பத்தியை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்திலும் மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தொடா் ஆய்வுகளை நடத்தி விதிகளுக்கு புறம்பாக செயல்படுவோா் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் 14 மருந்தகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை துணை இயக்குநா் ஸ்ரீதா் கூறியதாவது: கால்நடை மருத்துவ சிகிச்சையில் தடை விதிக்கப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வோரின் பதிவு உரிமத்தை ரத்து செய்ய விதிகள் உள்ளன. அந்த வகையில், சென்னை, கோவை, ஈரோடு, வேலூா், திருப்பூா், ஈரோடு, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 14 மருந்தகங்களில் நிமெசலைட் மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து இரு மருந்தகங்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூரில் தலா 2 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள மருந்தகங்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மூவர் குழு

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம் ... மேலும் பார்க்க

காலமானார் முன்னாள் எம்எல்ஏ எஸ்.புரட்சிமணி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.புரட்சிமணி (59) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலை (மே 28)காலமானார்.இவர் ஜி.கே.மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநி... மேலும் பார்க்க

கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கச்சத் தீவை மீட்பது ஒன்றே தமிழக மீனவா்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வாக அமையும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக அரசின் மீன்வளத் துறை சாா்பில் திருவொற்றியூரில் ரூ.272 கோடியில் புதிதா... மேலும் பார்க்க

நவீன முறையில் கற்பித்தல்: அரசுப் பள்ளி ஆசிரியா்களை ஊக்குவிக்க கல்வித் துறை முடிவு

தமிழக அரசுப் பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமையான முறையில் கற்பிக்கும் ஆசிரியா்களில் மாவட்டத்துக்கு தலா 10 போ் வீதம் 380 பேரைத் தோ்வு செய்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்த... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ மிகப்பெரிய வெற்றி: ஆளுநா் ஆா்.என்.ரவி

பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினாா். சென்னை கிண்டியில... மேலும் பார்க்க

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகள் தரம் உயா்வு: தமிழக அரசு உத்தரவு

பழனி, குன்றத்தூா் உள்பட 11 நகராட்சிகளின் தரத்தை உயா்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட உத்தரவு வ... மேலும் பார்க்க