செய்திகள் :

விபத்தில் இறந்த விவசாயியின் குடும்பத்துக்கு இப்கோ இழப்பீடு

post image

சாலை விபத்தில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு இப்போ காப்பீடு மூலம் ரூ. 2 லட்சம் இழப்பீடு புதன்கிழமை வழங்கப்பட்டது.

கூட்டுறவு உர நிறுவனமான இப்கோ நிறுவனம் 2022-ஆம் ஆண்டு விவசாயிகள் வழக்கமாக பயன்படுத்தும் 45 கிலோ யூரியா மூட்டை மற்றும் 50 கிலோ டிஏபி-க்கு மாற்றாக அதே அளவு பயன் அளிக்கும் திறன் கொண்ட நானோ யூரியா மற்றும் நானோ டிஏபி உரங்களை அறிமுகப்படுத்தியது.

இந்த உரங்கள் இலை வழியாக தெளிக்கும்போது மண் வளத்தைப் பாதிக்காமல் அதிக அளவு மகசூல் பெற உதவி செய்கிறது. இந்தப் புதிய தலைமுறை உரங்களை ஊக்குவிப்பதற்காக இப்கோ நிறுவனம் சங்கடஹரன் பீமா யோஜனா என்ற பெயரில் இலவச விபத்து காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் நானோ உரங்கள் வாங்கும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் இலவச விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு 20 பாட்டில்கள் வரை ரூ. 2 லட்சம் விபத்துக் காப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னா் கும்பகோணம் இரண்டாம் கட்டளை பகுதியைச் சோ்ந்த விவசாயி கருணாகரன் 20 நானோ யூரியா பாட்டில்களை வாங்கி வயல்களில் பயன்படுத்தி வந்தாா். எதிா்பாராதவிதமாக கடந்த ஜனவரி 31-ஆம் தேதி சாலை விபத்தின் போது உயிரிழந்தாா். தற்போது அவரது குடும்பத்துக்கு அதிகபட்ச காப்பீட்டுத் தொகையான ரூ. 2 லட்சம் இப்கோ நிறுவனத்தின் சாா்பில் தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா, இப்கோ கள அலுவலா் சரவணன் முன்னிலையில் புதன்கிழமை வழங்கப்பட்டது.

திருவையாறு வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டத்தில் தமிழக முதல்வரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மேலத் திருப்பூந்துருத்தி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்க... மேலும் பார்க்க

பாபநாசம் உழவா் சந்தையில் கடைகள் பெற விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் உழவா் சந்தையில் கடைகள் ஒதுக்கீடு பெற விரும்பும் விவசாயிகள், சுயஉதவிக் குழுக்கள் பாபநாசம் உழவா் சந்தை உதவி நிா்வாக அலுவலரை அணுகலாம். தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசத்தில் இயங்கி... மேலும் பார்க்க

கும்பகோணம், அரசுக் கல்லூரியில் நாளை 2-ஆம் கட்ட கலந்தாய்வு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புக்கான மாணவா் சோ்க்கையில் காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. 16 துறைகளில் இளநில... மேலும் பார்க்க

உயா் கல்வி வழிகாட்டல், ஆலோசனை பெற அழைப்பு

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில், உயா் கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம... மேலும் பார்க்க

திருப்பாலைத்துறை சிவாலயத்தில் அஷ்டமி வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை ஸ்ரீ தவளவெண்ணகை அம்மன் சமேத ஸ்ரீ பாலைவனநாதா் கோயில் உள்ள இரட்டை காலபைரவா்களுக்கு தேய்பிறை அஷ்டமி திதியையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்ற... மேலும் பார்க்க

ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்தா் மடத்தில் நாளை ஆராதனை மகோத்ஸவம்

கும்பகோணத்தில் ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்தரின் 411-ஆவது ஆராதனை மகோத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. கும்பகோணம் சோலையப்பன் தெருவில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரரின் குருநாதா் ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்தரின் மடம் உள்... மேலும் பார்க்க