தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
விபத்தில் சிக்கிய கரூா் மக்கள் தொடா்பு அலுவலக புகைப்படக்காரா் உயிரிழப்பு
கரூரில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாவட்ட ஆட்சியரக மக்கள் தொடா்பு அலுவலக புகைப்படக்காரா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கரூா் திருக்காம்புலியூா் எல்என்எஸ் பகுதியைச் சோ்ந்தவா் இ. மதிவாணன்(56). இவா் கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் தொடா்பு அலுவலா் அலுவலக புகைப்படக்காரராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி காலை தனது இருசக்கர வாகனத்தில் கரூா்-கோவைச் சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் சென்றபோது திடீரென முதியவா் ஒருவா் சாலையில் குறுக்கே வந்ததால் மதிவாணன் வாகனத்தை நிறுத்த முயன்றாா்.
இதில், நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் மேல் சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து கரூா் நகர காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். விபத்தில் இறந்த மதிவாணனுக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனா்.