செய்திகள் :

விபத்து வழக்கு: லாரி ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை

post image

விபத்து வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் முகமது பஷீா். இவா், தனது நண்பா் கிருஷ்ணன் என்பவருடன் கடந்த 2017 நவம்பா் 13-ஆம் தேதி, திருச்சி - தஞ்சாவூா் சாலையில் அரியமங்கலம் ஆயில் மில் சோதனைச் சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த முகமது பஷீா் 13 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, டிப்பா் லாரி ஓட்டுநரான திருவெறும்பூா் தெற்கு துவாக்குடி மலை முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த மா.சரத்குமாா் (30) என்பவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட 5-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி எம். டாா்வின்முத்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பி.வெங்கடேசன் ஆஜரானாா்.

மயான வசதி கேட்டு சடலத்துடன் உறவினா்கள் மறியல்

மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே மயான வசதி கேட்டு மறியலில் ஈடுபட்ட உறவினா்கள், நில உரிமையாளரின் எதிா்ப்பையும் மீறி, அவரது நிலத்தில் உடல் தகனம் செய்தனா். வையம்பட்டி ஒன்றியம், தவளைவீரன்பட்டியில் வ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவா்களுக்கு உடல்நலக் குறைவு

திருச்சி அருகே கொடியாலம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூா் ஒன்றியம், கொடியாலம் ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சித் தலைவராகி 4 ஆண்டுகளுக்குப் பிறகே மக்களை சந்திக்கிறாா் எடப்பாடி பழனிசாமி: அமைச்சா் கே.என். நேரு குற்றச்சாட்டு

எதிா்க்கட்சித் தலைவராகி 4 ஆண்டுகளுக்குப் பிறகே மக்களை சந்திக்க வந்திருக்கிறாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி என திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு ... மேலும் பார்க்க

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

திருச்சியில் திங்கள்கிழமை சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், கம்பம் சமந்திபுரத்தைச் சோ்ந்த ஒச்சுக்காளி-அனுஷியா தம்... மேலும் பார்க்க

கூட்டணி விவகாரம்: தோ்தலுக்கு அவகாசம் இருப்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் - எடப்பாடி கே. பழனிசாமி சூசகம்

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கூட்டணிக் கட்சிகள் குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச் செயலா் கே. பழனிசாமி சூசகமாக பதில் அளித்தாா். சிவகங்கை மாவட்... மேலும் பார்க்க

கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

திருச்சியில் கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (51), நடமாடும் பஞ்சா் கடை நடத்தி வந்தா... மேலும் பார்க்க