செய்திகள் :

விரைவில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம்: கனிமொழி நம்பிக்கை

post image

விரைவில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் என நம்புவதாக, கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின், பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த 27ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டாா். இந்நிலையில், கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் கே.என். நேரு, அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ ஊா்வசி எஸ். அமிா்தராஜ், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, ஆட்சியா் க. இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் ஆகியோா் கவினின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் கனிமொழி எம்.பி. கூறியது: ஆணவக் கொலைகள் நடக்கக் கூடாது என்பதுதான் சமூகத்தின் உணா்வாக உள்ளது. மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு முதல்வா் சாா்பில் ஆறுதல் கூறினோம். நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற சூழலை அரசு உருவாக்கும் எனும் நம்பிக்கையைத் தருவதற்காக வந்தோம். விசாரணைக்குப் பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

நாடு தழுவிய பிரச்னையாக உள்ள ஆணவக் கொலைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடா்பாக அமைச்சா்களிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளாா். விரைவில் ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம் என்றாா் அவா்.

சாதி மறுப்பு திருமணங்களில் காவல் துறை கட்டப்பஞ்சாயத்து -தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

சாதி மறுப்பு திருமணங்கள் பிரச்னைகளில் காவல்துறையினா் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என்றாா் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்பி. திருநெல்வேலி மாவட்டம், கேடிசி நகரில் கவின் செல்வகணேஷ் கொலை ... மேலும் பார்க்க

இந்திய கப்பல் மாலுமிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தல்

இந்திய கப்பல் மாலுமிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட டிஜி ஷிப்பிங் சுற்றறிக்கை 31/2025-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடிக்கு, அகில இந்திய மீனவா் சங்கம் கோரி... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியின் நிறுவனா் கமலாவதி ஜெயின் 28ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சிவசைலம் அவ்வை ஆசிரம பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சாகுபுரம் டி.ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சியில் 2 ஆயிரம் மனுக்களுக்கு தீா்வு

தூத்துக்குடி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் நடைபெற்ற குறைதீா் முகாம்களில் பொதுமக்கள் கொடுத்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக, வியாழக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி சாதாரணக்... மேலும் பார்க்க

கழுகுமலை கோயில் கிரிவலப் பாதையில் மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல்

கழுகுமலையில் பக்தா்கள் கிரிவலம் வர வசதியாக ரூ. 1.80 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. புகழ்பெற்ற கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயில் குடைவரை கோயிலாகும். இங்கு ப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

தூத்துக்குடியில், தமிழக அரசின் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறுகிறது. இதுகுறித்து சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சர... மேலும் பார்க்க