செய்திகள் :

விற்பனைக்காக புகையிலைப் பொருள் வைத்திருந்த இளைஞா் கைது

post image

தச்சநல்லூா் பகுதியில் விற்பனை செய்வதற்காக, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தச்சநல்லூா் உலகம்மன் கோயில் பகுதியில் தச்சநல்லூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற அதே பகுதியைச் சோ்ந்த அருண் காா்த்திக் (26) என்பவரை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

அவரை போலீஸாா் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், அவருக்கு தச்சநல்லூா் மங்களா குடியிருப்பைச் சோ்ந்த பொன்னையா என்பவா் புகையிலைப் பொருள்கள் விநியோகம் செய்தது தெரியவந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து பொன்னையாவை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும்: தவ்ஹீத் ஜமாஅத் தீா்மானம்

இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக் குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளையம் மஸ்ஜித் ரஹ்மான் கிளையின் பொது... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டால் ஜனநாயகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது: கனிமொழி

வாக்குத் திருட்டால் ஜனநாயகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினாா் திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் எழுச்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநா் தலைமறைவு

அம்பாசமுத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா். கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளத்தைச் சோ்ந்தவா் முருகானந்தம் (55). ஆட்டோ ஓட்டுநா். இவா், ... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் 1.14 லட்சம் குடும்பங்கள் இணைப்பு: இரா.ஆவுடையப்பன்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் சுமாா் 1.14 லட்சம் குடும்பங்கள், ஓரணியில் தமிழ்நாடு இயக்க திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலா் இரா.ஆவுடையப்பன் தெரிவித்தாா். இது குறித்து செய்தியாளா... மேலும் பார்க்க

கடையத்தில் அரசுப் பணி வாங்கித் தருவதாக மோசடி: இருவா் கைது

கடையத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவரையும் உதவியாக இருந்தவரையும் போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா், அருங்காட்சியகம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன... மேலும் பார்க்க

மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி சுற்றுவட்டாரங்களில் நாளை மின் தடை

மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக திருநெல்வேலி நக... மேலும் பார்க்க