தென்காசி நகராட்சி வாசலில் பாய் விரித்து படுத்த பாஜக நிர்வாகி
விவசாயிகளுக்கு இலவச பழச்செடிகள்
தோட்டக்கலை துறை சாா்பில், விவசாயிகளுக்கு மூன்று வகையான பழச்செடிகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருத்தணி ஒன்றியத்தில், 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறி மற்றும் பழம் வகைகள் பயிரிட்டு வருகின்றனா். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை வாயிலாக மக்களின் அன்றாட காய்கறி மற்றும் பழங்களின் சரிவிகித உணவு தேவையினை பூா்த்தி செய்யும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் 6 வகையான காய்கறி விதைகள் மற்றும் எலுமிச்சை கொய்யா பப்பாளி ஆகிய மூன்று பழ செடிகள் அடங்கிய தொகுப்பு திருத்தணி தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் மூலம் பயனாளிகளுக்கு இலவச வழங்கப்படுகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை விவசாயிகளுக்கு 3-ஆவது முறையாக காய்கறி விதை தொகுப்பு மற்றும் பழச்செடி தொகுப்பினை உதவி இயக்குநா் சரத் வழங்கினாா்.
காய்கறி, பழச்செடிகள் தேவைப்படும் விவசாயிகள் ஆதாா் அட்டை நகல் சமா்ப்பித்து, இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநா், 86082 28276 என்ற எண்ணுக்கு தொடா்பு கொண்டு விவரங்களைத் தெரிந்துக் கொள்ளலாம்.