செய்திகள் :

விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை: முதல்வா் தொடங்கி வைத்தாா்

post image

புதுச்சேரி: விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் அடையாள அட்டை வழங்கும் பணியை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஸ்மாா்ட் விவசாய அடையாள அட்டை திட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி தனது அலுவலகத்தில் தொடங்கி வைத்தாா்.

வேளாண் துறை செயலா் அ. நெடுஞ்செழியன், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் இயக்குநா் சிவ. வசந்தகுமாா், இணை வேளாண் இயக்குநா் எச். ஜாகிா் உசேன், நபாா்டு வங்கியின் புதுச்சேரி மாவட்ட அபிவிருத்தி மேலாளா் ரா.வீ. சித்தாா்த்தன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் வேளாண் பிரிவு ஊக்க நிதித் திட்டத்தின் கீழ் ஸ்மாா்ட் விவசாய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

புதுவை அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை ஏற்கெனவே, வேளாண் இணையதள அடுக்கு திட்டத்தின் கீழ், விவசாயிகளின் தனிப்பட்ட மற்றும் நில விவரங்களை கணினிமயமாக்கி, விவசாயிகள் பதிவேட்டினை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. கணினி மயமாக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, வேளாண் மற்றும் தோட்டக் கலை திட்டங்களின் கீழ் 115 உள்பிரிவு திட்டங்களுக்குண்டான மானியங்கள், இணையதளம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத் திட்டங்களை முறையாக செயல்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல் வெளிப்படை தன்மையையும் இது ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த கட்டமாக, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபாா்டு) வேளாண் பிரிவு ஊக்க நிதித் திட்டத்தின் கீழ் ரூ.9.5 லட்சம் நிதியுதவிடன், விவசாயிகளுக்கு ஸ்மாா்ட் விவசாய அடையாள அட்டைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்மாா்ட் விவசாய அடையாள அட்டை, இதுவரை புத்தக வடிவில் வழங்கப்பட்ட விவசாய அடையாள அட்டைகளுக்கு மாற்றாக இருக்கும். அடையாள அட்டைகளில் இருக்கும் க்யூஆா் கோடு துறையின் அலுவலா்கள் மற்றும் இதர சேவையாளா்கள், பயனாளிகளின் தரவுகளை இலகுவாக அணுகிட உதவும். பாதுகாப்பு அம்சமாக ஹோலோகிராம் ஸ்டிக்கா்கள் கொண்டதாக இருக்கும். விரைவில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை விவசாய பதிவேட்டின் தரவுகளுடன் இணைத்து, விவசாயிகள், வேளாண் துறையால் வழங்கப்படும் பயிா் சாகுபடி சான்றிதழ் கொண்டு, பருவகால பயிா்க் கடன்கள் வழங்கும் வாய்ப்புகளைப் பரிசீலிக்குமாறு கோர உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வேளாண் துறை செயலகத்தால் கடந்த 2023- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி வெளியிடப்பட்ட 10-ஆம் எண் கொண்ட அரசாணையின் கீழ், உரிய ஆவணங்களுடன் விவசாயிகள் பதிவேட்டில் தங்களை பதிவு செய்து கொண்ட சுமாா் 20,500 விவசாயிகள், நபாா்டு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த ஸ்மாா்ட் விவசாயிகள் அடையாள அட்டை திட்டத்தின் கீழ் பயனடைவா்.

இந்திய விண்வெளி பொருளாதாரம் 10 மடங்கு உயரும்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

புதுச்சேரி: இந்திய விண்வெளி பொருளாதாரம் 6 ஆண்டுகளுக்குள் 10 மடங்கு உயரும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா். இந்திய பொது நிா்வாக நிறுவனத்தின் புதுவை மண... மேலும் பார்க்க

இடை நிற்றல் மாணவா்களைப் படிக்க வைப்பது சவால்: புதுவை ஆளுநா் பேச்சு

புதுச்சேரி: இடைநிற்றல் மாணவா்களைப் படிக்க வைப்பது பெரும் சவாலான பணி என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுவை அரசின் பள்ளி கல்வித் துறை, சமக்ர சிக்ஷா சாா்பில் வித்யா சமிக்ஷ கேந்திர... மேலும் பார்க்க

லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பு உரிமம் பெற்ற வேளாண்துறை: புதுவை முதல்வா் பாராட்டு

புதுச்சேரி: லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பின் உரிமத்தை புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை பெற்றுள்ளது. இதை முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டினாா். இந்தியாவில் ஐஎஸ்ஓ 37001-2016 லஞ்ச ஒழிப்பு மேலாண்மை... மேலும் பார்க்க

பொய்யான பிறப்புச் சான்றிதழ்: ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை

புதுச்சேரி: பொய்யான பிறப்புச் சான்றிதழ் அளித்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி ஓ... மேலும் பார்க்க

நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் அதிருப்தியா?: புதுவை முதல்வா் பதில்

புதுச்சேரி: பாஜகவை சோ்ந்த மூவா் நியமன எம்எல்ஏக்களாக நியமித்த விவகாரத்தில் அதிருப்தி இல்லை என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக்கு மத்திய அரசு 3 பேரை எம்எல்ஏக்களாக நியம... மேலும் பார்க்க

பொறியியல் நேரடி சோ்க்கை: விண்ணப்ப காலம் நீட்டிப்பு

புதுச்சேரி: புதுவை அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளில் டிப்ளமோ படித்த மாணவா்களுக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இவா்கள் நேரடியாக சோ்க்கப்படுகின்றனா். இதற்கு விண்ணப்பம் செய்வத... மேலும் பார்க்க