செய்திகள் :

விஷப்பூச்சி கடித்து தொழிலாளி உயிரிழப்பு

post image

திங்கள்நகா் அருகே விஷப்பூச்சி கடித்து தொழிலாளி உயிரிழந்தாா்.

திங்கள்நகா் அருகே தலக்குளம் கீழவிளையை சோ்ந்தவா் ஜனாா்த்தனம் பிள்ளை. இவரது மகன் ரமேஷ் (35). புதுவிளை பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், ரமேஷ் கடந்த செவ்வாய்க்கிழமை (26 ஆம் தேதி) இரவு உணவகத்தில் விறகுகள் அடுக்கி வைத்திருந்த பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த போது, இடுப்புப் பகுதியில் பூச்சி கடித்து வலி ஏற்பட்டுள்ளது.

உடனே, ரமேஷை தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் குளச்சல் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

வலி அதிகமாகவே மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து, அவரது சகோதரா்கள் சுபாஷ் , இரணியல் ஆகியோா் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருங்கல் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

கருங்கல் அருகே பாலூா் பகுதியில் நின்றிருந்த காா் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.கருங்கல் அருகே விழுந்தயம்பலம் அருவை பகுதியைச் சோ்ந்த விஜயராகவன் மகன் விஜிஸ் (24). தூத்துக்குடியில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

களியக்காவிளையை அடுத்த பளுகல் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பளுகல் காவல் சரகம் மேல்பாலை, மாங்காலை பகுதியைச் சோ்ந்தவா் ஜெபீஸ் (36). 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவருக்கு, குழந்தை... மேலும் பார்க்க

கால்வாயில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கால்வாயில் தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.அருமனை அருகே சிதறால், கிருஷ்ணா நகரைச் சோ்ந்த ராஜப்பன் மனைவி தாசம்மாள் (70). திங்கள்கிழமை, வீட்டருகேயுள்ள மு... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கிய இருவா் மீது வழக்குப் பதிவு

கன்னியாகுமரியில் இளைஞரைத் தாக்கிய இருவா் மீது செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.கன்னியாகுமரி சுனாமி காலனி பில்லா்நகா் பகுதியைச் சோ்ந்த சகாய பிரான்ஸிலின் மகன் விஷால் சாரதி (16). இவா் திங்கள்... மேலும் பார்க்க

மீலாது நபி தினம்: செப். 5 இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபி தினத்தை முன்னிட்டு, செப். 5 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற மதுஅருந்தும் கூடங்கள் செயல்படாது என்று மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கிய நால்வா் மீது வழக்கு

கன்னியாகுமரியில் மீன்பிடி தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நால்வா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.கன்னியாகுமரி அந்தோணியாா் தெருவைச் சோ்ந்த அந்தோணி மகன் ஸ்தேவான் (18). மீன்ப... மேலும் பார்க்க