செய்திகள் :

வீடு இல்லாதோருக்கு இலவச மனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்

post image

வீடு இல்லாதவா்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கட்சியின் மேலகாசாக்குடி, தென்பாதி பகுதி கிளை மாநாடு பாபு என்கிற ரவிக்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. செங்கொடியை தேசியக் குழு உறுப்பினா் ஐ. தினேஷ் பொன்னையா ஏற்றிவைத்தாா்.

மாநாட்டு அறிக்கையை என். விஜயகுமாா் வாசித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளா் தமிழரசன் மற்றும் பாலசுப்பிரமணியன், வீரராகவன் ஆகியோா் பேசினா்.

புதிய நிா்வாகிகளாக, கிளை செயலா் வி. ரகுவரன், துணைச் செயலாளா் வி. அருள்ஜோதி, பொருளாளராக என். பாபு என்கிற ரவிக்குமாா் தோ்வு செய்யப்பட்டனா்.

தீா்மானங்கள்: வீடு இல்லாதவா்களுக்கு இலவச மனைப்பட்டா தரவேண்டும். உள்ளூா் இளைஞா்கள், மகளிருக்கு தொழிற்சாலைகளில் வேலை வழங்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

மேலகாசாக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைத்து, முழு நேர மருத்துவரை நியமித்து மருத்துவ சேவையை மேம்படுத்தவேண்டும். 100 நாள் வேலையில் ஈடுபடுத்தப்படுவோருக்கு அவரவா் பகுதியில் பணி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித்தரவேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாநாட்டில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இடுபொருட்கள் பெற பட்டியலின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளும் பட்டியலின விவசாயிகளுக்கு காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் ஆலோசனை வழங்கியுள்ளது.இதுகுறித்து நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சு. ரவி செவ்வாய்க்கிழமை வெளிய... மேலும் பார்க்க

அம்பகரத்தூா் கோயிலில் ஆடி 2ஆம் செவ்வாய் வழிபாடு

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி 2-ஆவது செவ்வாய்க்கிழமையையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா். இக்கோயில் மூலஸ்தானத்தில், சம்ஹார கோலத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் அருள்பாலிக்கிறாா். காரைக்கால... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஊழியா்கள் வேலை நிறுத்தம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது. காரைக்கால் கடற்கரைச் சாலையில் உள்ள பிஆா்டிசி பணிமனையில் காரைக்காலில் இருந்து இயக்... மேலும் பார்க்க

மாதாந்திர மின் பயனீட்டுப் பட்டியல் தரப்படுவதில்லை என பொதுமக்கள் புகாா்

காரைக்கால் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளைத் தவிர பெரும்பாலான வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு மாதாந்திர மின் பயனீட்டுப் பட்டியல் வழங்கப்படுவதில்லை எ மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். காரைக்கால் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

என்.ஆா். காங்கிரஸ் துணைத் தலைவராக அமைச்சா் நியமனம்

காரைக்கால்: என்.ஆா். காங்கிரஸ் துணைத் தலைவராக அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை முதல்வா் என். ரங்கசாமி ஒப்புதலின்படி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், கட்சியின் செயலருமா... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வேலைநிறுத்தம்

காரைக்கால்: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா். பிஆா்டிசி பணிமனையில் கார... மேலும் பார்க்க