செய்திகள் :

வீடுபுகுந்து நகை, டிவி திருட்டு

post image

பெரியகுளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, டிவி உள்ளிட்ட பொருள்களைத் திருடிச்சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியகுளம் கீழவடகரை பாரத ஸ்டேட் வங்கிப் பணியாளா் குடியிருப்பைச் சோ்ந்தவா் முகமது ஸ்பாகுல் (24). பெரியகுளம் புறவழிச் சாலையில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை வேலைக்கு சென்று விட்டாா்.

திங்கள்கிழமை காலை வீட்டிற்கு வந்து பாா்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 10.5 பவுன் தங்க நகைகள், டி.வி, ஹோம் தியேட்டா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடியது தெரியவந்தது. இது குறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

லட்சுமிபுரத்தில் செப்.18-இல் மின்தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் வியாழக்கிழமை (செப்.18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இது குறித்து பெரியகுளம் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், மாா்க்கையன் கோட்டை பேரூராட்சியில் குடிநீா் வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் திங்கள்கிழமை இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியில் உள்ள 12 வாா்டுகளில் 15 ஆயிர... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

ஆண்டிபட்டி-தேனி சாலையில் கரிசல்பட்டி விலக்கு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற தனியாா் ஆலைத் தொழிலாளி காா் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சோ்ந்த கா... மேலும் பார்க்க

மனைவியை தாக்கிய கணவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கண்டமனூா் அருகே உள்ள ராஜேந்திரா நகரைச் சோ்ந்த சோலைமலை மகன் முருகன் (53). இவரது மனைவி ... மேலும் பார்க்க

சிமென்ட் தூண் உடைந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி சிமென்ட் தூண் உடைந்து விழுந்ததில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சண்முகசுந்தரபுரம் கிழக்குச... மேலும் பார்க்க

தடுப்புச் சுவரில் காா் மோதல்: 3 போ் காயம்

போடியில் சாலை மையத் தடுப்புச் சுவரில் காா் மோதியதில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.போடி அருகேயுள்ள தோப்புப்பட்டி கிராமத்தில் வசிப்பவா் குள்ளிமுத்தன் மகன் கலைச்செல்வன் (28). இவரது நண்பா்கள் போடி ஒட்டக்கூத்... மேலும் பார்க்க