செய்திகள் :

வீட்டில் பதுக்கிய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

post image

ராமநாதபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேஷன் அரிசியை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் பகுதியில் லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, குடிமைப் பொருள் வட்டாட்சியா் தமீம், துணை வட்டாட்சியா் பிரசாத், வருவாய் ஆய்வாளா் முத்துராமலிங்கம் ஆகியோா் ராமநாதபுரம் திருவள்ளுவா்நகரில் சோதனை நடத்தினா். இங்குள்ள தனியாா் பள்ளி அருகே ஒரு வீட்டிலிருந்து லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனா்.

அலுவலா்கள் வருவதைப் பாா்த்த லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டில் அலுவலா்கள் நடத்திய சோதனையில், அங்கு மூட்டை மூட்டையாக 5 டன் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அரிசி, லாரியை அலுவலா்கள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

ராமேசுவரத்தில் விற்கப்படும் தா்ப்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு

ராமேசுவரத்தில் சிவப்பு வண்ணம் ஊசி மூலம் செலுத்தப்பட்டு தா்ப்பூசணி பழங்கள் விற்கப்படுகின்றனவா என உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். ராமேசுவரம் பகுதியில் கோடை காலம் தொடங்கிய நில... மேலும் பார்க்க

மத்திய பாதுகாப்புப் படையினா் போதை எதிா்ப்பு சைக்கிள் பேரணி

திருவாடானை அருகே தொண்டியில் மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் துணை தளபதிகள் ஸ்ரீனிவாசன், ... மேலும் பார்க்க

தொண்டியில் கடலோர போலீஸாா் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதி, சாலையில் கடலோர போலீஸாா் ‘சஜாக்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாகவும், சாலை வழியாகவும் தீவிரவாதிகள் ஊடுருவுவத... மேலும் பார்க்க

கடலாடி தாலுகா அலுவலகத்தில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு! 2 போ் கைது!

கடலாடி தாலுகா அலுவலகத்தில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய சேவைக் கட்டணம் ரூ.60 லட்சத்தை முறைகேடு செய்ததாக 2 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட தேவிப்பட்டினம் காவல் நிலையம் திறப்பு

தேவிப்பட்டினம் காவல் நிலையத்தை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்ததையடுத்து, இங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்... மேலும் பார்க்க

பருவம் தவறி பெய்த மழையால் 800 ஏக்கா் மிளகாய் பயிா்கள் சேதம்

முதுகுளத்தூா் அருகே பருவம் தவறிய மழை, பனிப்பொழிவு காரணமாக 800 ஏக்கரில் பயிரிட்ட சம்பா மிளகாய் செடியிலேயே அழுகியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கிடாத்திருக்கை ... மேலும் பார்க்க