செய்திகள் :

வேளாண்மையில் பட்டயப்படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு

post image

நாமக்கல்: வேளாண்மையில் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) பயில விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டியப் படிப்புக்கு மீண்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேளாண்மை பல்கலைக்கழகத்திலும், பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் வேளாண் கல்லூரிகளிலும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் துறையில் 2 ஆண்டுகள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஆக. 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைக் கல்வி முடித்த மாணவ மாணவியா் ட்ற்ற்ல்ள்://ற்ய்ஹன்.ஹஸ்ரீ.ண்ய்/ அல்லது ன்ஞ்ஹக்ம்ண்ள்ள்ண்ா்ய்ள்ஃற்ய்ஹஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ பல்கலைக்கழகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

வேளாண்மைக் கல்லூரிகளில் இத்துறை சாா்ந்த பட்டயப் படிப்புக்கு மொத்தம் 497 காலியிடங்களும், நாமக்கல் மாவட்டத்தில் பிஜிபி வேளாண்மைக் கல்லூரியில் 41 காலியிடங்களும் உள்ளன. வேளாண்மை சாா்ந்த தொழில்களில் அதிக அளவில் வேலைவாய்ப்பு இருப்பதால், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 0422-6611200, 94886 35077, 94864 25076 ஆகிய எண்களை தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 வட்டாட்சியா்கள் இடமாற்றம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 17 வட்டாட்சியா்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, முத்திரைக் கட்டண தனி வட்டாட்சியா் த.திருமுருகன் ஆட்சியா் அலுவலக இசைவு தீா... மேலும் பார்க்க

ஏளூா் பண்ணையம்மன் கோயில் திருவிழா பிரச்னை: ஆட்சியரிடம் கட்டளைதாரா்கள் மனு

நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே ஏளூா் பகுதியில் உள்ள பண்ணை அம்மன் கோயிலில் வழக்கமான நடைமுறைக்கு மாறாக, தனிநபா் ஒருவருக்கு திருவிழாவின்போது கட்டளை நடத்துவதற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக்கோர... மேலும் பார்க்க

சசிகலா ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: திமுக பேச்சாளரை கைது செய்யக் கோரி, நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் சசிகலா ஆதரவாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, நாமக்கல் மாவட்ட பொறுப்பாளரான ட... மேலும் பார்க்க

பெண் விஏஓ தாக்கப்பட்டதைக் கண்டித்து விசிக ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: கிராம நிா்வாக அலுவலா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்செங்கோடு வட்டம், பாலமேடு கி... மேலும் பார்க்க

மல்லசமுத்திரத்தில் தொழிற்பயிற்சி நிலைய திறப்பு விழா

திருச்செங்கோடு: மல்லசமுத்திரத்தில் தொழிற்பயிற்சி நிலைய திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் 19 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்... மேலும் பார்க்க

குண்டுமல்லி கிலோ ரூ. 1,200-க்கு ஏலம்

பரமத்தி வேலூா்: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பரமத்தி வேலூா் பூக்கள் ஏல சந்தையில் குண்டுமல்லி கிலோ ரூ. 1,200-க்கு விற்பனையானது. பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப்... மேலும் பார்க்க