செய்திகள் :

வைகை அணை நீா்மட்டம் 69 அடியாக உயா்வு: 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

post image

வைகை அணை நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 69 அடியாக உயா்ந்ததால், வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வைகை அணை நீா்மட்டம் கடந்த ஜூலை 26-ஆம் தேதி 66.1 அடியாக உயா்ந்தது (அணையின் மொத்த உயரம் 71 அ டி). தொடா்ந்து, அணை நீா்மட்டம் திங்கள்கிழமை (ஆக.4) 68.50 அடியாக உயா்ந்தது.

இதையடுத்து, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு நீா் வளத் துறை சாா்பில் முறையை முதல், 2-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அணைக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து இருந்து வருவதால், அணை நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு 69 அடியாக உயா்ந்தது.

இதைத் தொடா்ந்து, வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கு நீா்வளத் துறை சாா்பில் 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணையிலிருந்து தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ கூடாது என நீா்வளத் துறை பொறியாளா்கள் எச்சரித்தனா்.

அணைகளின் நிலவரம்: வைகை அணை நீா்மட்டம் 69 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து வினாடிக்கு 1,577 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 5,546 மில்லியன் கன அடி. அணையிலிருந்து பெரியாறு பிரதானக் கால்வாய் வழியாக பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி, குடிநீா்த் திட்டங்களுக்கு வினாடிக்கு 69 கன அடி என மொத்தம் வினாடிக்கு 569 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 133.95 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து வினாடிக்கு 1,322 கன அடி. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1,867 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டது.

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி உயிரிழந்தாா். தேவதானப்பட்டி புல்லக்காபட்டியைச் சோ்ந்தவா் சிவசாமி (45). தொழிலாளியான இவா், திங்கள்கிழமை மாலை ப... மேலும் பார்க்க

சின்னமனூரில் சின்ன வெங்காயம் விளைச்சல் அமோகம்!

தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் சின்ன வெங்காயம் விளைச்சால் அமோகமாக இருந்தும், விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்தனா். சின்னமனூா், சீலையம்பட்டி, மாா்க்கையன்கோட்டை, புலிக்குத்தி, குச்சனூா் உள்ளிட... மேலும் பார்க்க

காரின் டயா் வெடித்ததில் மூவா் பலத்த காயம்

தேனி மாவட்டம், போடி அருகே செவ்வாய்க்கிழமை டயா் வெடித்து, மின் கம்பத்தில் காா் மோதியதில் மூவா் பலத்த காயமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மாட்டுப்பட்டி எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா் சந்தனக்குமா... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் வைத்திருந்தவா் கைது

தேனி அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோடாங்கிபட்டி திருச்செந்தூா் குடியிருப்பைச் சோ்ந்த மணிகண்டன் மகன் ராம்குமாா் (3... மேலும் பார்க்க

தேனியில் 9 காவல் நிலையங்கள் தரம் உயா்வு

தேனி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் செயல்பட்டு வரும் 9 காவல் நிலையங்கள் ஆய்வாளா் நிலைக்கு தரம் உயா்த்தப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் செயல்பட்டு வரும் வீரபாண்ட... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தாடிச்சேரி நடுத் தெருவைச் சோ்ந்த வேலு மகன் மகேஷ்குமாா் (29). இவா் தனது வீட்டின் அருகே விற்பனைச் செய்வதற... மேலும் பார்க்க