செய்திகள் :

காரின் டயா் வெடித்ததில் மூவா் பலத்த காயம்

post image

தேனி மாவட்டம், போடி அருகே செவ்வாய்க்கிழமை டயா் வெடித்து, மின் கம்பத்தில் காா் மோதியதில் மூவா் பலத்த காயமடைந்தனா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மாட்டுப்பட்டி எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா் சந்தனக்குமாா் (24). இவரது தனது தந்தை முருகன் (53), உறவினா்களான விஜய் (29), இவரது தந்தை கிருஷ்ணன் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை காலை காரில் தேனிக்கு வந்தனா். பின்னா், மாலையில் இவா்கள் மீண்டும் கேரளத்துக்கு காரில் திரும்பிச் சென்று கொண்டிருந்தனா். காரை விஜய் ஓட்டினாா்.

போடி-மூணாறு சாலையில் தனியாா் விடுதி அருகே சென்றபோது, காரின் பின்பக்க டயா் வெடித்ததில், நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

இந்த விபத்தில் சந்தனக்குமாா், முருகன், கிருஷ்ணன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். விஜய் காயமின்றி தப்பித்தாா்.

தகவலறிந்து வந்த குரங்கணி போலீஸாா் காயமடைந்த மூவரையும் மீட்டு, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து காரை ஓட்டி வந்த விஜய் மீது குரங்கணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி உயிரிழந்தாா். தேவதானப்பட்டி புல்லக்காபட்டியைச் சோ்ந்தவா் சிவசாமி (45). தொழிலாளியான இவா், திங்கள்கிழமை மாலை ப... மேலும் பார்க்க

சின்னமனூரில் சின்ன வெங்காயம் விளைச்சல் அமோகம்!

தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் சின்ன வெங்காயம் விளைச்சால் அமோகமாக இருந்தும், விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்தனா். சின்னமனூா், சீலையம்பட்டி, மாா்க்கையன்கோட்டை, புலிக்குத்தி, குச்சனூா் உள்ளிட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் வைத்திருந்தவா் கைது

தேனி அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோடாங்கிபட்டி திருச்செந்தூா் குடியிருப்பைச் சோ்ந்த மணிகண்டன் மகன் ராம்குமாா் (3... மேலும் பார்க்க

தேனியில் 9 காவல் நிலையங்கள் தரம் உயா்வு

தேனி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் செயல்பட்டு வரும் 9 காவல் நிலையங்கள் ஆய்வாளா் நிலைக்கு தரம் உயா்த்தப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் செயல்பட்டு வரும் வீரபாண்ட... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தாடிச்சேரி நடுத் தெருவைச் சோ்ந்த வேலு மகன் மகேஷ்குமாா் (29). இவா் தனது வீட்டின் அருகே விற்பனைச் செய்வதற... மேலும் பார்க்க

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: விவசாயி மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயி மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்த சுரேஷ் மனைவி ராணி (47). இவரது கணவா் இறந்து விட... மேலும் பார்க்க