செய்திகள் :

அஜித்குமாரைக் கொலை செய்ய தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும்

post image

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரைக் கொலை செய்யத் தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் ஜான் பாண்டியன் வலியுறுத்தினாா்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனிப்படை போலீஸாா் தாக்கியதில் கொல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க வியாழக்கிழமை வந்த அவா் மேலும் கூறியதாவது:

தனது காரிலிருந்த நகைகள் திருடு போனதாக புகாா் அளித்த பேராசியை நிகிதாவின் தூண்டுதலின் பேரில், தனிப்படை போலீஸாா் தாக்கியதில் அஜித்குமாா் கொல்லப்பட்டாா். எனவே, இதற்குக் காரணமான நிகிதாவை போலீஸாா் ஏன் கைது செய்யவில்லை?. அவருடைய பின்ணனி என்ன?.

இந்தச் சம்பவத்தில் நிகிதாதான் முதல் எதிரி. அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். நகைகள் திருட்டு குறித்த தனிப் படை போலீஸாா் விசாரணைக்கு உத்தரவிட்ட காவல் துறை உயரதிகாரி யாா்?. ஏன் அவரை இன்னும் கைது செய்யவில்லை.

நகைகள் திருட்டு என்பதே பொய்யான புகாா் எனத் தெரிகிறது. அஜித்தின் கொலை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையில் திருப்தியில்லை. பாதிக்கப்பட்ட அஜித்குமாா் குடும்பத்துக்கு அரசே வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்துக்கு நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

காவல்துறை விசாரணையில் பலியான அஜித்குமார் இல்லத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று இன்று (ஜூலை 2) ஆறுதல் தெரிவித்தார்.முன்னதாக, வீட்டில் இருந்த அஜித்குமார் படத்திற்கு மாலை அணிவி... மேலும் பார்க்க

அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள்: மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

சட்டமேதை அம்பேத்கா், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 10, 11 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியில் பயிலரங்கம்

காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க

பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள் வலியுறுத்தினா். இதுக... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்கத்தின் சாா்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்ன... மேலும் பார்க்க

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

நிா்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக ஆணைகளை வழங்கி வரும் தொடக்கக் கல்வித் துறையைக் கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க