செய்திகள் :

அஜித் குமார் மீது புகார் அளித்த பேராசிரியை நிகிதா கல்லூரிக்கு வருகை!

post image

திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் மீது புகார் அளித்த பேராசிரியை நிகிதா, மருத்துவ விடுப்பு முடிந்து மீண்டும் கல்லூரிக்கு திரும்பியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு திண்டுக்கல் அரசு கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரியும் நிகிதா, கடந்த ஜூன் 27 ஆம் தேதி காலை சென்றுள்ளார். அங்கு தனது நகை காணாமல் போனதாகவும், கோவில் காவலாளி அஜித் குமார் மீது சந்தேகம் இருப்பதாகவும் காவல்துறை உயர் அதிகாரியிடம் நிகிதா வாய்மொழிப் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் பிறப்பித்த உத்தரவின்பேரில், அஜித் குமாரை அழைத்துச் சென்ற தனிப்படைக் காவலர்கள் 5 பேர், விசாரணை என்ற பெயரில் அவரை அடித்து கொடுமை செய்துள்ளனர். தனிப்படைக் காவலர்கள் தாக்கியதில் அஜித் குமார் உயிரிழந்தார்.

இந்த நிலையில், 5 தனிப்படை காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அஜித் குமார் மீது புகார் அளித்த நிகிதா மற்றும் தனிப்படை காவலர்களுக்கு உத்தரவிட்ட உயர் அதிகாரிகளை விசாரணை வளையத்தில் கொண்டுவர பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அஜித் குமார் கொலை வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாவட்ட நீதிமன்றத்தின் விசாரணைக்கு மாற்றியிருக்கிறது.

இந்த நிலையில், மருத்துவ விடுப்பில் இருந்த நிகிதா, விடுமுறை முடிந்து திங்கள்கிழமை காலை மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.

Professor Nikitha, who filed a complaint against Thiruppuvanam temple guard Ajith Kumar, has returned to the college after completing her medical leave.

இதையும் படிக்க : சொல்லப் போனால்... என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம்?

மருந்து ஆய்வாளா் பணியிடங்களை நிரப்ப கலந்தாய்வு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மருந்து ஆய்வாளா் பணியிடங்கள் அடுத்த வாரத்துக்குள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளதாக மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக துறை அதிகாரிகள்... மேலும் பார்க்க

தமிழகத்தின் நாளைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நாளைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்தின் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். அதிமுகவின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப் பயணத்தின் தொடக்க நிகழ்ச்... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் மின்கட்டணம் 52% உயர்வு: இபிஎஸ்

திமுக ஆட்சியில் மின்கட்டணம் 52 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர... மேலும் பார்க்க

அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின்

அரசு சார்பில் பிறப்பிக்கப்படும் அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது,நான்கு மணி நேரம்... மேலும் பார்க்க

தமிழகத்தில் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் சாலை, மேம்பால பணிகளுக்காக ரூ.7,500 கோடி ஒதுக்கி அரசாணை இன்று(ஜூலை 7) வெளியிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 3,268 கி.மீ. சாலை மற்றும் மேம்பால பணிகளுக்காக நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டு... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்கள் மூடலா? - அமைச்சர் கீதா ஜீவன் மறுப்பு!

தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவ... மேலும் பார்க்க