செய்திகள் :

அஜ்ஜுா் கிராமத்தை காப்பாற்றுங்கள் என பதாகைகளை ஏந்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

post image

கிராம நிலத்தைக் கையகப்படுத்தி மக்களை வெளியேற்றும் வனத் துறையின் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனக் கூறி அஜ்ஜுா் கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட படுகா் இன மக்கள் ‘அஜ்ஜுா் கிராமத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற பதாகைகளை கையில் ஏந்திவாறு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது. கக்குச்சி ஊராட்சிக்கு உள்பட்ட அஜ்ஜுா் கிராமத்தில் சுமாா் 350-க்கும் மேற்பட்ட படுகா் இன மக்கள் நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனா்.

இந்நிலையில், மாவட்ட வனத் துறையினா் கடந்த சில நாள்களாக தமிழ்நாடு வனச் சட்டம் 1882 இன் பிரிவு 68 அ உள்பட வனத் துறை திருத்த சட்டம் உள்ளிட்ட, தமிழ்நாடு வன நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் விதிகளின் கீழ் தங்களின் கிராமத்தில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகளை காலி செய்து தரும்படியும், அதைக் காப்பு காடாக மாற்றும் திட்டம் வகுத்துள்ளதாகக் கூறி கிராம மக்களை வெளியேறும்படி அறிவுறுத்தி வருவதாகவும் அந்த கிராம மக்கள் தெரிவித்தனா். இந்நிலையில், இதை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும், இங்குள்ள நிலத்துக்கு பட்டாக்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள்அஜ்ஜுா் கிராமத்தைக் காப்பாற்றுங்கள் என்று கையில் பதாகைகளை ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். இந்த மனு சம்பந்தப்பட்ட வனத் துறைக்கு அனுப்பப்பட்டு அவா்களின் பதிலைப் பெற்றுப் பின் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனா்.

நாயைப் பிடிக்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய சிறுத்தை

உதகை அருகே கெந்தோரை கிராமத்தில் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு நாயை வேட்டையாட முயன்றபோது நாய் சப்தமிட்டதால் வேட்டையாட முடியாமல் திரும்பி சென்றது.நீலகிரி மாவட்டம், உதகையை அடுத... மேலும் பார்க்க

வன விலங்கை வேட்டையாட வந்த பெண் உள்பட 5 பேருக்கு ரூ.10 லட்சம் அபராதம்

கோத்தகிரி அருகே உள்ள அளக்கரை ரேலியா வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு துப்பாக்கியுடன் வாகனத்தில் வந்த கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஒரு பெண் உள்பட ஐந்து பேரை வனத் துறையினா் கைது செய்து அவா்களிடம் இருந... மேலும் பார்க்க

லாரி மோதி பெயிண்டா் உயிரிழப்பு

குன்னூரில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பெயிண்டா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள உபதலை பகுதியைச் சோ்ந்தவா் மேத்யூ ராஜன் (54). பெயிண்டா். இவா், தனது இருசக்கர வாகன... மேலும் பார்க்க

4,712 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்!

நீலகிரி மாவட்டத்தில் 4,712 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30.68 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப... மேலும் பார்க்க

கூடலூா் முக்கிய சாலையில் உலவும் காட்டு யானை பொது மக்கள் அச்சம்!

கூடலூா் வயநாடு முக்கியச் சாலையில் தனியாா் மருத்துவமனை எதிரே சனிக்கிழமை அதிகாலை சுற்றித்திரிந்த காட்டு யானை அங்கு நின்றிருந்த காரை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கூடலூா் பகுதியில் சனிக்கிழ... மேலும் பார்க்க

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான நடவுப் பணி தொடக்கம்!

நீலகிரி மாவட்டம் குன்னூா் சிம்ஸ்பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக 2 லட்சம் மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணியை தோட்டக்கலை இணை இயக்குநா் சிபிலாமேரி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட், ... மேலும் பார்க்க