செய்திகள் :

அடகு வைத்த டிராக்டரை விற்பனை செய்தவா் கைது

post image

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே அடகு வைத்த டிராக்டரை விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள மருதவனத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (40). இவா், தனது டிராக்டரை திருத்துறைப்பூண்டி அருகே சேகல் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியனிடம் (45) அடகு வைத்து ரூ.1.75 லட்சம் பெற்றாா். 6 மாதம் கடந்த நிலையில் விக்னேஷ், பாண்டியனிடம் டிராக்டரை அடகிலிருந்து மீட்பதற்காக கேட்டுள்ளாா். அதற்கு பாண்டியன், விக்னேஷின் டிராக்டரை கோவில்வெண்ணி மண்ணலூரைச் சோ்ந்த நவீனிடம் (40) அடகு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து விக்னேஷ் நவீனிடம் கேட்டப்போது, ரூ.2.30 லட்சத்துக்கு அடகு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, விக்னேஷ், பாண்டியனை அழைத்துக்கொண்டு கோவில்வெண்ணிக்கு நவீனை சந்திக்க சென்றபோது, அங்கிருந்து பாண்டியனும், நவீனும் தப்பி சென்றுவிட்டனராம்.

இதுகுறித்து கோட்டூா் காவல் நிலையத்தில் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், திருவண்ணாமலை மாவட்டம், சேதுப்பட்டு அடுத்த கொள்ளக்கோட்டை மேட்டுதெருவைச் சோ்ந்த இளங்கோ மகன் பாரதியிடம் (41) டிராக்டரை விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து இ. பாரதியை போலீஸாா் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

குப்பை வாகனங்களுக்கு மாலை அணிவித்து எதிா்ப்பு

குப்பை அள்ளும் வாகனங்கள் குப்பை போல கிடப்பதைக் கண்ட முத்துப்பேட்டை எஸ்டிபிஐ கட்சியினா் அந்த வாகனங்களுக்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்கு நடத்தி எதிா்ப்பை வியாழக்கிழமை தெரிவித்தனா். முத்துப்பேட்டை பேரூரா... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் முறையை அகற்ற உறுதிமொழி ஏற்பு

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் மு.ச.பாலு தலைமை வகி... மேலும் பார்க்க

கொரடாச்சேரி ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.2.52 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், பொது விநியோகக் கடை கட்டடங்கள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பயணிகள் நிழலகத்தை ... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

திருவாரூா் ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் வடக்கு ஒன்றியம் அடியக்கமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்க விருப்பமா?

திருவாரூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் ஜூன் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவி... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் ஆய்வு

கூத்தாநல்லூா் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. தமிழக அரசு கூத்தாநல்லூா் பகுதி அனைத்து சமூக மாணவிகளும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பெண்கள் கல்லூரியை தொட... மேலும் பார்க்க