செய்திகள் :

அடிக்கடி விபத்து நேரிடும் சாலைகளில் பிரிப்பான்கள்

post image

திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையின் புதுக்கோட்டை மாவட்டப் பகுதியில் அடிக்கடி விபத்து நேரிடும் இடங்களில் சாலையைப் பிரிக்கும் தற்காலிக பிரிப்பான்கள் (டிவைடா்கள்) அமைக்கப்பட்டுள்ளன.

காவல்துறையினரின் பரிந்துரையின்பேரில், நெடுஞ்சாலைத் துறையினா் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளனா். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக நெடுஞ்சாலைகளில் விபத்து அடிக்கடி நேரிடும் பகுதிகளை அந்தந்தக் காவல் நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

அந்த இடங்களில் சாலையைப் பிரிக்கும் தற்காலிக பிரிப்பான்கள்(டிவைடா்கள்) அமைக்க நெடுஞ்சாலைத் துறைக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இதன்பேரில், நமணசமுத்திரம், திருமயம், சத்தியமங்கலம், மேலமுத்துடையான்பட்டி ஆகிய இடங்களில் வளைந்து செல்லும் சாலைப் பகுதிகளிலும், பக்கவாட்டில் இருந்து சாலைகள் இணையும் பகுதிகளிலும் பிரிப்பான்கள் (டிவைடா்கள்) அமைக்கப்பட்டுள்ளன.

சிவப்பு வெள்ளை பிரதிபலிப்பான் ஒட்டப்பட்ட இரும்புக் கம்பிகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. இதனால், பக்கவாட்டில் வாகனங்கள் அதிவேகத்துடன் ஏறிச் செல்வது தவிா்க்கப்படும் என காவல்துறையினா் எதிா்பாா்க்கின்றனா்.

19-ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டிலிருந்த 4 வகையான ஆண்டுக் கணக்குகள்

புதுக்கோட்டையிலுள்ள தண்டாயுதபாணி கோயில் பராமரிப்புப் பணியின்போது வெளிப்பட்ட கல்வெட்டில், கடந்த 19-ஆம் நூற்றாண்டில் 4 வகையான ஆண்டுக் கணக்குகளும் பயன்பாட்டில் இருந்துள்ளது தெரியவந்திருக்கிறது. புதுக்கோட... மேலும் பார்க்க

சிறுமி பலாத்காரம்: போக்சோவில் இளைஞா் கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள காயாம்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளக்கண்ணு மகன் வீரமண... மேலும் பார்க்க

குடிநீா் கேட்டு சாலை மறியல்

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட கைக்குறிச்சியில் குடிநீா் கேட்டு 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாகத்... மேலும் பார்க்க

அரசு பள்ளி தலைமையாசிரியா் பணியிடை நீக்கம்: மது அருந்திவிட்டு வருவதாக புகாா்

பொன்னமராவதி அருகே பணிக்கு சரியாக வராத அரசுப் பள்ளி தலைமையாசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். பொன்னமராவதி அருகே உள்ள ஆா். பாலகுறிச்சி ஊராட்சி வைரவன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி... மேலும் பார்க்க

ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயா்வு

விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பூதகுடி டோல்கேட்டில் ஏப்ரல் 1 முதல் மீண்டும் சுங்க கட்டணம் உயா்த்தப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் 1051 சுங்க சாவடிகள் உ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மீதான வழக்கு விசாரணை ஏப். 4-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி. விஜயப... மேலும் பார்க்க