செய்திகள் :

அடுத்து என்ன? முப்படை தளபதிகளுடன் பிரதமர் விரிவான ஆலோசனை!

post image

புது தில்லி: போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி விரிவான ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரிவான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. முக்கியமாக, பாகிஸ்தானுடனான உறவுகள் குறித்தும், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 3 நாள்களாக வான் வழி தாக்குதல்கள் மூலம் இந்திய எல்லைப் பகுதிகளில் அச்சுறுத்தி வந்த பாகிஸ்தானுக்கு இந்தியா ராணுவ ரீதியாக தக்க பதிலடி கொடுத்தது. இந்தநிலையில், இரு நாடுகளும் அமைதிப் பாதைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன் அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தது.

இதனால் போர் நிறுத்தம் செய்து கொள்ளலாமென இன்று மாலை அதிரடியாக அறிவித்திருக்கிறது பாகிஸ்தான். இதற்கு இந்தியாவும் சம்மதித்துள்ளதைத் தொடர்ந்து, மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலாகியுள்ளது.

தேசிய சட்ட உதவிகள் ஆணைய செயல் தலைவரானார் உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த்!

தேசிய சட்ட உதவிகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை பிறப்பித்தாா். என்ஏஎல்எஸ்ஏ-யின்... மேலும் பார்க்க

பத்மஸ்ரீ விருது வென்ற ஐசிஏஆா் முன்னாள் தலைவா் மா்ம மரணம்: காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு!

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) முன்னாள் தலைமை இயக்குநரும் பத்மஸ்ரீ விருதாளருமான சுப்பண்ணா ஐயப்பனின் (70) உடல் கா்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டதாக போலீஸ... மேலும் பார்க்க

இன்று புத்த பூா்ணிமா: குடியரசுத் தலைவா் வாழ்த்து!

புத்த பூா்ணிமாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்துள்ளாா். புத்தரின் பிறந்த நாளான புத்த பூா்ணிமா திங்கள்கிழமை (மே 12) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும்: முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து!

இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலின் மூலம், பாகிஸ்தான் பாடம் கற்றிருக்கும் என்று முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஓய்வுபெற்ற மேஜா் ஜெனரல் பி.கே.சேகல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூற... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு: ஷாபாஸ் ஷெரீஃப்

காஷ்மீா் விவகாரம் உள்பட இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு அமைதி வழியில் பேச்சுவாத்தை மூலம் தீா்வு காண வேண்டும் என பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா். சண்டை நிறுத்த அற... மேலும் பார்க்க

சிம்லா ஒப்பந்தம்: இந்திரா காந்தி அரசு மீது பாஜக சாடல்!

பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்ட சிம்லா ஒப்பந்தம் தொடா்பாக முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி அரசை பாஜக ஞாயிற்றுக்கிழமை சாடியது. கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரைத் தொடா்ந்து, இருநா... மேலும் பார்க்க