செய்திகள் :

அட்சய திருதியை: தமிழ்நாட்டில் ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டிய பதிவுத்துறை!

post image

சென்னை : புதன்கிழமை அட்சய திருதியை நாள் என்பதால், ஏராளமானோர் சொத்துகள் வாங்கியதன் மூலம், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.272.32 கோடி வருவாயை பதிவுத்துறை ஈட்டியிருக்கிறது.

சொத்துகள் வாங்க - விற்க அதிகமானோர் சார் பதிவாளர் அலுவலகங்களில் குவிவார்கள் என்பதால், நேற்று வழக்கத்தை விட அதிகமான டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், அட்சய திருதியை நாளான நேற்று, ஒரே நாளில் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. இதுபோன்று கடந்த அட்சய திருதியை நாள்களிலும் அதிகமான வருவாய் ஈட்டப்பட்டிருந்தாலும் இது புதிய சாதனை என்று கூறப்படுகிறது.

அதாவது, ஒரு நாள் வருவாய் வசூலில் இதுவரை இல்லாத அளவில் அதிக வசூல் செய்து பதிவுத்துறை புதிய சாதனை படைத்திருப்பதாக அமைச்சர் மூர்த்தி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்.10ஆம் தேதி முகூர்த்த நாள் என்பதால் தமிழ்நாடு முழுவதும் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு பதிவுத் துறை ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் திருச்சி பயணம்

அரசு மற்றும் திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் திருச்சி செல்கிறாா். 2 நாள்கள் பல்வேறு நிகழ்வுகளில் அவா் பங்கேற்கவிருக்கிறாா். மே ... மேலும் பார்க்க

மாநிலங்களை மையப்படுத்திய வளா்ச்சி: ஆளுநா் ஆா்.என்.ரவி

மாநிலங்களை மையப்படுத்தி இந்தியா வளா்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். குஜராத், மகாராஷ்டிரம், ஹிமாசல பிரதேச மாநிலங்கள் உருவான தின விழா சென்னை ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

முக்கிய சாலைகளில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் பணி தொடரும்

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட முக்கிய சாலைகளில் தமிழ்நாடு முன்னாள் படைவீரா் கழக நிறுவனம் மூலம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து பெருநகர சென்னை ... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

வழிப்பறி வழக்கில் ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். சென்னை கொடுங்கையூா், அமுதம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (51). இவா், 2018- ஆம் ஆண்டு ஏப்.14-ஆம் தேதி ... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கு பரிந்துரை: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கு தகுதியான பரிந்துரைகளை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்... மேலும் பார்க்க

எனக்கு அரசியல் ஆா்வம் இல்லை: நடிகா் அஜித்குமாா்

தனக்கு அரசியலில் ஆா்வம் இல்லை என நடிகா் அஜித்குமாா் தெரிவித்தாா். அஜித்குமாா் வியாழக்கிழமை தன்னுடைய 54- ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினாா். பிறந்த நாள் மற்றும் பத்மபூஷண் விருது பெற்றதையொட்டி அளித்த பேட்ட... மேலும் பார்க்க