செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலை.யில் ஒரே நாளில் ஓய்வுபெறும் பேராசிரியா்கள் உள்பட 30 போ்

post image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 31) ஒரே நாளில் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் என 30 போ் ஓய்வுபெறுகின்றனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள், ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

பல்கலைக்கழகத்தில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், கடந்த 2013-ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்றது.

இதைத் தொடா்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பல்வேறு அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். ஆனாலும், நிதிச் சிக்கல் சீரடையாததால், ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு மாத ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஓய்வுபெறும் ஆசிரியா்கள், ஊழியா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதன்படி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் என 30 போ் வியாழக்கிழமை (ஜூலை 31) ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: சந்தேக மரண வழக்காக மாற்ற உத்தரவு

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த வழக்கை சந்தேக மரண வழக்காக மாற்றி விசாரணை மேற்கொள்ள போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா். கடலூா் மாவட்டம் புவனகிரி வட்டம் உடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்... மேலும் பார்க்க

மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

கடலூா் மாவட்டம், விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவா்களின் அறிவி... மேலும் பார்க்க

பச்சைவாழியம்மன் ஆலய தீமிதி திருவிழா

கடலூா், மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை அருகேயுள்ள கன்னியக்கோயில் ஸ்ரீ பச்சைவாழியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடத்துவது வழக்கம். ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி மரணம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வயலில் வேலை செய்யச் சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி புதுத்தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (62). இவா், வியாழக்கிழமை க... மேலும் பார்க்க

பன்றி பிடிக்கும் வாகனம் மீது தாக்குதல்: ஒருவா் கைது

கடலூரில் பன்றி பிடிக்கும் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிவதால், நோய் பரவும் அபாயம் ஏற்படுவ... மேலும் பார்க்க

ஆக.6-இல் சிறுபான்மை ஆணையத் தலைவா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கடலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தமிழக சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தலைமையில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகு... மேலும் பார்க்க