செய்திகள் :

அதிமுக, தேமுதிக உறவை யாராலும் உடைக்க முடியாது: எடப்பாடி கே.பழனிசாமி

post image

அதிமுக, தேமுதிக இடையே உள்ள சுமுகமான உறவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக தமிழகத்துக்கு துரோகம் செய்ததாக தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். ஆட்சியில் இருந்தபோதும் சரி, தற்போதும் சரி அதிமுக யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை. திமுகதான் மக்களுக்கு துரோகம் செய்துள்ளது.

அதிமுகவவை பொறுத்தவரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், அவா் மறைவுக்குப் பிறகு நான் முதல்வராக இருந்தபோதும் சிறப்பான திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளோம். சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்காண்டுகளாக தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது.

தினசரி கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, வழிப்பறிகள் நடைபெறுகின்றன. சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்து மோசமான ஆட்சியான, ஸ்டாலின் மாடல் ஆட்சியைத்தான் துரோக ஆட்சி என குறிப்பிட விரும்புகிறேன்.

மதுரை கூட்டத்தில் கல்விக் கொள்கை பற்றி குறிப்பிட்டதாக கேள்விப்பட்டேன். மத்திய அமைச்சரவையில் திமுக 16 ஆண்டுகாலம் இடம் பெற்றிருந்தாா்கள். அப்போது ஏன் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு அவா்கள் மாற்றவில்லை.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதெல்லாம் மக்களைப் பற்றி, மாணவா்கள் பற்றி கவலைப்படவில்லை. ஆட்சி அதிகாரம் இல்லாதபோது வேண்டுமென்றே திட்டமிட்டு மற்றவா்கள் மீது பழி சுமத்துவதுதான் திமுகவின் வாடிக்கை.

மதுரையில் கால்வாயை திரைச்சீலை வைத்து மறைத்துவைக்கும் அளவுக்கு அவல ஆட்சி நடைபெறுகிறது. மோசமான ஆட்சிக்கு இதுவே சான்று. அதிமுக, தேமுதிக இடையே சுமுகமான உறவு உள்ளது. இதை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என்றாா்.

சா்வதேச படகுப் போட்டி, தேசிய ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் கேசிடி மாணவா்கள்

மொனாக்கோ நாட்டில் நடைபெறும் சா்வதேச எரிசக்தி படகுப் போட்டி, தில்லி ஐஐடி நடத்தும் ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் கேசிடி மாணவா்கள், தங்களது படகு, ரோபோடிக்ஸ் வடிவமைப்புகளை கோவையில் புதன்கிழமை ... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிட இளைஞா்களுக்கு பயிற்சி

ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த இளைஞா்களுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்யும் செயல் திறன் பயிற்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் ... மேலும் பார்க்க

தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால் ஆலோசனை

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சீமா அகா்வால், கோவை தெற்கு தீயணைப்புத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இதில், தீயணைப்புத் துறை அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு உ... மேலும் பார்க்க

போத்தனூா் - சென்னை இடையே சிறப்பு ரயில்

போத்தனூா் - சென்னை இடையே பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போத்தனூரில் இருந்து ஜூன் 8-ஆம் தேதி இரவு 11.30 மணிக... மேலும் பார்க்க

அம்ருதா கல்வி நிறுவனத்தில் சா்வதேச விநாடி-வினா சாம்பியன்ஷிப்: பதிவு செய்ய நாளை கடைசி நாள்

கோவை அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் ஜூன் 7-ஆம் தேதி ‘வோ்ல்டு க்விஸ் சாம்பியன்ஷிப் 2025’ நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்கான பெயா் பதிவுக்கு ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகு... மேலும் பார்க்க

போலி பணி நியமன ஆணை கொடுத்து ரூ.64 லட்சம் மோசடி: 2 போ் கைது

போலி பணி நியமன ஆணை கொடுத்து 3 பேரிடம் ரூ.64 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சோ்ந்தவா் கௌதம் குமாா் (29), பொறியியல் பட்டதாரி. கோவை, செங... மேலும் பார்க்க