செய்திகள் :

``அதிமுக-வில் செங்கோட்டையனுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது”-வைத்திலிங்கம்!

post image

ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

"அதிமுகவில் இருக்கிற எல்லோரும் கட்சி ஒன்றிணைந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். இல்லை என்றால் முடியாது என்று உணர்ந்திருக்கிறார்கள், இதைப்பற்றி வெளிப்படையாக பேசுகிறார்கள்.

அப்படி தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்றைக்கு வெளிப்படுத்தியுள்ளார். அது வரவேற்கத்தக்கது.

வைத்திலிங்கம்

செங்கோட்டையன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவருடைய நல்ல மதிப்பை பெற்றவர். கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனதுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் சொன்னதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

ஒன்றிணைப்பு குழு என்பது குறித்து எனக்கு இன்றைக்கு தான் தெரிய வந்துள்ளது. எங்களிடம் செங்கோட்டையன் தொடர்பில் இல்லை. அவருக்கு அதிமுகவில் ஆதரவு அதிகமாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது.

அவருடைய எண்ணம் போல் எல்லா தொண்டர்களும் விரும்புகிறார்கள் நிச்சயமாக எல்லோரும் அதை வரவேற்பார்கள். பத்து நாள் கெடு கொடுத்திருக்கார் இல்லை என்றால் இணைப்பதற்கான முயற்சியை அவர் மேற்கொள்ளவார் என்பதே அதன் அர்த்தம்.

செங்கோட்டையன் பிரஸ் மீட்

பத்து நாள் கெடு முடிந்தவுடன் எனது கருத்தை நான் தெரிவிப்பேன். கட்சி சார்பு இல்லாத பொதுமக்கள் அனைவரும் அதிமுக ஒன்றிணை வேண்டும் என நினைக்கிறார்கள்.

அதிமுக மீது தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள். அதை இணைப்பதற்கு தடையாக இருப்பவர்கள் மீது கோபமாகவும் இருக்கிறார்கள்.

அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் எல்லோரும் ஒத்த கருத்துடன் இருப்பார்கள் என்பது என் எண்ணம்" என்றார்.

பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி

துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சியையும், ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்... மேலும் பார்க்க

``எடப்பாடி தலைமையை ஏற்க முடியாது; அது தற்கொலைக்கு சமம்'' – தொடர்ந்து விமர்சிக்கும் டிடிவி தினகரன்

"ஓபிஎஸ்-சும் நானும் கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுதான்" என்று மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டம... மேலும் பார்க்க

``ஆமை புகுந்த வீடும், பா.ஜ.க நுழைந்த மாநிலமும் உருப்படாது'' - ப.சிதம்பரம் காட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டியில் காங்கிரஸ் கட்சி புதிய அலுவலக கட்டட திறப்பு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு:"... மேலும் பார்க்க

Doctor Vikatan: மூட்டுவலி உள்ளவர்கள் வாக்கிங் போகலாமா, உடற்பயிற்சி செய்யலாமா?

Doctor Vikatan:மூட்டுவலி (Arthritis) உள்ளவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா, எந்த வகையான உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். வாக்கிங் செய்யலாமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர்... மேலும் பார்க்க

பதவி பறிப்பு மசோதா: ``INDIA கூட்டணியில் அதிக குற்றப்பின்னணி இருக்கும் கட்சி திமுக'' - ADR அறிக்கை

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி அரசு, நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பதவி நீக்க மசோதாவை அறிமுகப்படுத்தியது.அதில், “ஓர் அமைச்சர் பதவியில் இருக்கும்போது, ஐந்து ... மேலும் பார்க்க

ஆரோக்கியம் தருவது சைவமா; அசைவமா? - மருத்துவர் சொல்வதென்ன?

சாப்பாடு என்றாலே நம் எல்லோருடைய மனதிற்குள்ளும் அப்படியொரு சந்தோஷம் வரும். அது பசிக்கும்போது வீட்டில் அம்மா தன் கையால் பரிமாறும் சாம்பார் சாதமாக இருந்தாலும் சரி, நண்பர்களுடன் சுடச்சுட பிரியாணி சாப்பிடு... மேலும் பார்க்க