செய்திகள் :

"அந்த இரண்டு வீரர்கள் இல்லாதது நிம்மதியாக இருக்கிறது" - இங்கிலாந்து லெஜண்ட்ஸ் குறித்து பண்ட்

post image

சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இங்கிலாந்து அணியை நாளை (ஜூன் 20) எதிர்கொள்ளவிருக்கிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் கோலி இல்லாததும், மூன்று போட்டியில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்பதும் கில் அண்ட் கோ-வுக்கு சற்று சவாலானதுதான். அதேசமயம், இது ஒரு புதிய அணியை கட்டமைப்பதற்கான வாய்ப்பும் கூட.

இந்த நிலையில், எதிரணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் இல்லாதது குறித்து துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரிஷப் பண்ட், "அவர்கள் இருவரும் இல்லாதது நிம்மதியா இருக்கிறது.

ஏனெனில் பல வருடங்களாக இங்கிலாந்து அணியில் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

கடைசி இரண்டு சுற்றுப்பயணங்களில் மட்டும் அவர்களுக்கெதிராக நான் விளையாடியிருக்கிறேன்.

இருப்பினும், தற்போதைய இங்கிலாந்து அணியின் பந்துவீச்சும் போதுமான அளவுக்குப் பலமாக இருக்கிறது.

எங்கள் அணியும் இளம் அணியாக இருப்பதால் யாரையும் எளிதாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

இந்த இளம் வீரர்கள் தங்களை இன்னும் மேம்படுத்த விரும்புகிறார்கள். அதேசமயம், நமக்கான ஆட்டத்தையும் நாம் ஆடவேண்டும்.

ஸ்டூவர்ட் பிராட் - ஜேம்ஸ் ஆண்டர்சன்
Stuart Broad - James Anderson

எதிரணி பந்துவீச்சாளர்களையும் தேவைப்படும் இடத்தில் மதிக்க வேண்டும்" என்று கூறினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கெதிராக அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனும் (149 விக்கெட்டுகள்), 7-வது இடத்தில் ஸ்டூவர்ட் பிராட்டும் (74 விக்கெட்டுகள்) இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs ENG: "இந்த 3 விஷயங்களில் கவனமாக இருங்கள்" - சுப்மன் கில் அணிக்கு சச்சின் ஆலோசனை!

Mஇங்கிலாந்தில் ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பைக்கான தொடரில் பங்கேற்கவிருக்கும் இளம் இந்திய அணிக்கு 3 அறிவுரைகளை வழங்கியுள்ளார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணியின் பக்க பலமாக இருந்த... மேலும் பார்க்க

IPL 2025: 100 கோடி பார்வையாளர்கள், 84,000 கோடி நிமிடங்கள்... சாதனை படைத்த ஜியோ ஸ்டார்!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் கொண்டாட்டமாக ரசித்து மகிழ்வது, வருடாந்திர வழக்கமாகியிருக்கிறது. எல்லையில் பாகிஸ்தானுடன் மோதலையும் கடந்து வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிரு... மேலும் பார்க்க

ENG vs IND: `கோலியுடன் விளையாடாதது வருத்தமே..' - இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. விராட் கோலிமுதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜூன்20) ஹெட்டிங்ல... மேலும் பார்க்க

TNPL: பந்தை சேதப்படுத்தியதாக அஷ்வின் மீது அளிக்கப்பட்ட புகார் - வாபஸ் பெற்ற மதுரை பாந்தர்ஸ் அணி

டி.என்.பி.எல் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மீது கொடுத்தப்புகாரை மதுரை பாந்தர்ஸ் அணி திரும்ப பெற முடிவு செய்திருக்கிறது. டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் கடந்த 14-ந் தேதி... மேலும் பார்க்க

`கொச்சி அணிக்கு ரூ.538 கோடி வழங்க வேண்டும்!’ - உயர் நீதிமன்றம் உத்தரவு; என்ன செய்யப்போகிறது BCCI?

இந்தியாவில் 2008-ல் தொடங்கிய ஐ.பி.எல்லில் 2010 வரை மூன்று சீசன்களாக 8 அணிகள் பங்கேற்று விளையாடி வந்தன.பின்னர், 2011 சீசனில் இலங்கையின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே தலைமையில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா என்ற... மேலும் பார்க்க

"என்னை நானே தேர்வுசெய்ய மாட்டேன்; ஆனால் என் முயற்சி..." - கம்பேக் குறித்து உமேஷ் யாதவ்

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலகட்டத்தில் குறிப்பாக, பும்ரா, ஷமி, சிராஜ் போன்றோருக்கு முன்பாக முன்னணி வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்தவர் உமேஷ் யாதவ்.கடைசியாக 2023-ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்ப... மேலும் பார்க்க